Monday, May 12, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
11/05/2025
in தமிழ்நாடு
0
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

AlsoRead

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பேரணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

காஷ்மீரில் தமிழக மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்து 2021 ஆம் ஆண்டு சோதனை நடத்தினர். அதில், பல்வேறு முக்கிய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் கரூரில் ரூ.100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் சொத்து தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த நிலத்திற்கு சொந்தமானவர்கள் தங்களிடமிருந்து நிலத்தை அபகரித்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது சகோதரர் உள்ளிட்டோர் மீது கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. பின்னர், இந்த வழக்கின் தீவிர தன்மையை கருதி சிபிசிஐடி-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் பெற முடியாத காரணத்தினால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார். இதனையடுத்து, 13 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சிபிசிஐடி அதிகாரிகளால் கேரளாவில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். அடுத்த மாதமே அவரது சகோதரர் சேகரும் கைது செய்யப்பட்டார்.

100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்களை அடிப்படையாக வைத்து வருமான வரி புலனாய்வு பிரிவில் இருக்கும் பினாமி தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, இந்த நிலமானது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பினாமி சொத்து இல்லை எனவும், பினாமி பரிவர்த்தனை மூலமாக வாங்கப்பட்டது இல்லை எனவும் நிரூபிக்குமாறு கூறி வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் மற்றும், அந்த நிலம் தொடர்பான உரிமையாளர்கள் பிரகாஷ் மற்றும் ஷோபனா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஏற்கனவே மே 9ம் தேதி ஆஜராகும் படி தெரிவித்திருந்த நிலையில், தற்போது மே 23ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞரோ அல்லது அது தொடர்பான பொறுப்புடைய நபர்களையோ வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராகும் படி வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: AIADMKIncome taxM.R. Vijayabaskar
Previous Post

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

Next Post

நம் எதிரிகள் கோழைகள்..! நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

Related Posts

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

11/05/2025
திராவிட நல் திருநாடு என்று சொன்னால் நாக்கு தீட்டாகிவிடுமா? எரியும் என்றால் திரும்பத் திரும்ப பாடுவோம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பேரணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

09/05/2025

காஷ்மீரில் தமிழக மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்

09/05/2025

துரைமுருகனின் இலாகா பறிக்கப்பட்டது ஏன்?

09/05/2025

விஜய்க்கும்… பவன்கல்யாணுக்கும் என்ன தெரியும்? நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் பாய்ச்சல்..!

08/05/2025

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் : பிரதமருக்கு வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி

07/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு
  • நம் எதிரிகள் கோழைகள்..! நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!
  • முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்
  • இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி
  • போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved