Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அலட்சிய அரசு அதிகாரிகள் ; நீதிமன்ற நேரம் வீண் : உயர்நீதிமன்றம் வேதனை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
28/04/2025
in தமிழ்நாடு
0
பொது இடங்களில் அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பொதுமக்களின் வழக்குகளுக்காக 7 சதவீத நேரத்தை மட்டுமே நீதிமன்றங்கள் செலவிடுவதாகக் குறிப்பிட்ட சென்னை நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளது.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

நிலம் கையகப்படுத்தியதற்காக இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சங்கர் ஷா, குமரேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரி நிறைவேற்றாதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில், வாக்களார் சரிபார்க்கும் பணியில் அதிகாரி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது, அரசு அதிகாரிகள் எல்லா நேரமும் வாக்காளர் சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அதிருப்தி தெரிவித்தார். அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளில் 60% நேரமும், அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளில் 25% நேரமும் நீதிமன்றம் செலவிடுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி,

பொதுமக்களுக்கான வழக்குகள் விசாரணைக்காக வெறும் 7% நேரத்தை மட்டுமே செலவிடுவதாக தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, பொதுமக்களுக்கு பணி செய்வது தான் தங்கள் கடமை என்பதையே அரசு அதிகாரிகள் மறந்து விட்டதாகவும் தெரிவித்தார். இவ்வாறு அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளால் தான் நீதிமன்றங்களின் பணிச்சுமையும் அதிகரிப்பதாகவும், அரசுக்கும் அவபெயர் ஏற்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

பணி சுமை, நேரமின்மை எனக்கூறி, பணியில் இருந்தும் கடமையில் இருந்தும் அதிகாரிகள் விலகி செல்ல முடியாது என தெரிவித்த நீதிபதி, அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக செய்தால் மக்கள் ஏன் நிவாரணம் கோரி நீதிமன்றத்தை நாடப்போகிறார்கள் என கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், இது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும், வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி மீது கருணை காட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி வேல்முருகன், இது போன்ற வழக்குகளில் கடமை தவறிய அரசு அதிகாரிகளுக்கு எந்த வித கருணையும் காட்ட முடியாது என்றும் கருணை காட்டினால் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழந்து விடுவார்கள் எனக் கூறி, இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த இருப்பதாகக் கூறி, விசாரணையை ஜூன் 6 ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Tags: Chennai High CourtNegligent government officials
Previous Post

நெட்பிலிக்ஸ், ப்ரைம் வீடியோ நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Next Post

பாக் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் அச்சத்தில் ராஜினாமாவா?

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved