Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தமிழகத்தின் நலன் கருதி வைகோவிற்கு பதவி துரை வைகோ திமுகவிற்கு வலியுறுத்தல்..!

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
28/04/2025
in தமிழ்நாடு
0
மதிமுக முதன்மைசெயலாளர் பதவியிலிருந்து துரை வைகோ விலகல் : வைகோ அதிர்ச்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகத்தின் நலன் கருதி வைகோவிற்கு மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும் என துரை வைகோ தி.மு.க.,விற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

கோவில்பட்டியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. பேசியதாவது:-

தி.மு.கவில் 30 ஆண்டுகள், மதிமுகவில் 31 ஆண்டுகள் என 61 ஆண்டுகள் அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருக்கிறேன். என்னுடைய அரசியல் மற்றும் பொது வாழ்வில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து வெளியே அனுப்பிய பங்கு ம.தி.மு.கவுக்குத் தான் உண்டு. விவசாயிகள், மீனவர்கள், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக உண்ணாவிரதம், மறியல் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி இந்த ஆலையை நிரந்தரமாக மூட நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தேன்.

நிரந்தரமாக மூட தீர்ப்பு வந்தது. இந்த ஆலையை வைத்து வருமானம் தேடிய லாரி அதிபர்கள் நாமக்கல் அருகே ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரே குரலாக பயங்கரவாதிகளை அகற்ற துணை புரிய வேண்டும். நாட்டில் மதத்தின் பெயரால் மோதல், கலவரம் ஏற்படக்கூடாது.

அழிந்து போன குடும்பங்கள்:

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தால் அழிந்து போன விவசாய குடும்பங்கள் ஏராளம். இதன் அர்த்தம் அனைவருக்கும் தெரியும். அவ்வளவு ஊதியம் கொடுத்து களை வெட்டுவதற்கு ஆட்களை கூப்பிட முடியாது. அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள். விவசாய நிலங்களை விற்பனை செய்ய வேண்டாம். இதற்கு 100 சதவீதம் மதிப்பு வரப்போகிறது. உலகத்தில் உணவு பஞ்சம் வரவுள்ளது. அப்போது விவசாயியைத் தான் எல்லோரும் தேடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் துரை வைகோ எம்.பி. கூறியதாவது:

பல்கலைக் கழக வேந்தராக ஆளுநர் இருந்தாலும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்கள் மனிதநேயத்துக்கு எதிரானவர்கள். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ம.தி.மு.கவை கடந்து வைகோ சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர். 30 ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியாற்றியுள்ளார். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து பேசி உள்ளார். அதில் பல விஷயங்களில் வெற்றியும் அடைந்துள்ளார்.

வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்பதை தமிழகத்தின் குரலாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர ம.தி.மு.கவின் குரலாக பார்க்கக் கூடாது. அரசியலைக் கடந்து வைகோ மாநிலங்களவை உறுப்பினராக போவது ம.தி.மு.கவுக்கு மட்டும் அல்ல தமிழகத்துக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது. தி.மு.க தலைமை கண்டிப்பாக பரிசீலிக்கும் என நம்புகிறேன் என்றார்.

-மா.பாண்டியராஜ்

Tags: Durai VaikoMKStalinTamilnadu NewsVaiko
Previous Post

ரேஷன் துவரம் பருப்பில் கலப்படம் : மாநிலம் முழுதும் சோதனை நடத்த அரசு உத்தரவு

Next Post

நடிகர் அஜித்-க்கு பத்ம பூஷன் விருது வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவிப்பு

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved