Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு? அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்.. கலக்கத்தில் எடப்பாடி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
30/03/2025
in தமிழ்நாடு
0
எடப்பாடி பழனிசாமி –செங்கோட்டையன் சமரசமா..?! அப்டித்தான் சொல்றாங்க..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

அதிமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் அமித் ஷாவை ரகசியமாக சந்தித்தார். மத்திய அரசு அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மூத்ததலைவர் செங்கோட்டையன் டெல்லியில் அமித் ஷாவை ரகிசயமாக சந்தித்தார் என கூறப்படும் நிலையில் அவருக்கு Y பிரிவு பாதுகாப்பினை மத்திய அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே செல்வாக்கு மிக்க தலைவராக திகழும் கொங்கு மண்டல ஜாம்பவான் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருந்து வந்த பனிப்போர் அத்திக்கடவு-அவினாசி திட்ட நிறைவு பாராட்டு விழாவின்போது வெடித்தது. அந்நிகழ்வைப் புறக்கணித்த செங்கோட்டையன் இபிஎஸ்-ஐ தவிர்த்து வந்தார். இதர தலைவர்களிடம் பட்டும்படாமல் இருந்து வருகிறார். கட்சியில் இது சலசலப்பை ஏற்படுத்தியது.

சட்டமன்ற நிகழ்வுகளில் கூட எடப்பாடி பழனிசாமியை அவர் சந்திக்காமல் தவிர்த்து வந்தார். செங்கோட்டையன் சந்திக்காமல் தவிர்ப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக தற்போது வரை ஒற்றுமையாகவும் பலமாகவும் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில்தான், பாஜகவுடன் கூட்டணியே கிடையாது எனக் கூறி வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அன்றிரவே, 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்நிலையில், சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா, பதிவிட்டிருந்தால் அது அவரது விருப்பம் என்றும் தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றி அறிவிக்க முடியும் என்றும் பேசினார்.

இது இப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியுடன் பிணக்கு கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று அமித் ஷாவை ரகசியமாக சந்தித்திருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இபிஎஸ்-ஐ சந்தித்த இரண்டு நாட்களிலேயே செங்கோட்டையனை அமித் ஷா பார்த்திருப்பது அதுவும் அண்ணாமலை உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டு இருக்கும் சூழலில் சந்தித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை எனத் தகவல் வெளியாகி உள்ளது. செங்கோட்டையன் கோரிக்கை அடிப்படையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய புலனாய்வு அதிகாரிகள், உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது அரசியலாக பேசப்பட்ட நிலையில் தற்போது செங்கோட்டையனுக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவல் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கை ஓங்கி வருவதை இது காட்டுவதாக இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: AIADMKSengottaiyanTamil News TodayY category security
Previous Post

அமாவாசையை முன்னிட்டு பருவதமலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Next Post

அமித்ஷா, எடப்பாடியை குறி வைக்க காரணம் என்ன?எனக்கே ஆட்டமா..?

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved