திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத வளர்பிறை சனிப் பிரதோஷ தினமான நேற்று ஐந்து நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.
கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு புரட்டாசி மாத சனிப் பிரதோஷ காலத்தில் சிவாச்சாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிசிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் மாலை அணிவித்து மகா தீபாரதனை நடைபெற்றது.
பெரிய நந்தி பகவானுக்கு புரட்டாசி மாத சனி பிரதோஷத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள் ,தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் பல்வேறு விதமான வண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகாதீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டபடி பிரதோஷ காலத்தில் நந்தி பகவானை வழிபட்டனர்.



