Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

எம்.பி.க்களின் எண்ணிக்கை எவ்வளவு முக்கியம் தெரியுமா?

M.Pandiyaraj, Sub Editor by M.Pandiyaraj, Sub Editor
02/03/2025
in இந்தியா
0
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம் : நாளை பட்ஜெட் தாக்கல்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

1956-ல் நிர்வாக வசதிக்காக புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 522 ஆக உயர்ந்தது. பின்னர் 1973-ல் அது 543 ஆனது. அதற்குப் பிறகு கடந்த 50 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்குக் காரணம் தென் மாநிலங்களின் எதிர்ப்பு தான்.

மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் தொகைக் கட்டுப்பாடு திட்டங்களை தென் மாநிலங்கள் தீவிரமாக அமல் செய்தன. அதன் காரணமாக, மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்தது. நாம் இருவர் நமக்கு இருவர் என்பது மாறி பல வீடுகளில் நமக்கு ஒருவர் என்ற நிலைதான் உள்ளது. இதற்கு தென் மாநில மக்களின் படிப்பறிவும் ஒரு முக்கிய காரணம்.

மாறாக, வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்தது. அதைக் காரணம் காட்டி வட மாநிலங்களில் எம்.பி. சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தென் மாநிலங்களில் குறைக்கவும் மத்திய அரசு முயற்சிப்பதாக தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 888 எம்.பி.க்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தற்போதைய மக்கள் தொகையின்படி, எம்.பி.க்களின் எண்ணிக்கை 846 ஆக உயர வாய்ப்புள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி, உ.பி.யில் தற்போதுள்ள 80 எம்.பி. சீட்டுகள், 143 ஆக அதிகரிக்கும். பீகாரில் 40-ல் இருந்து 79 ஆக, ஏறக்குறைய 2 மடங்காக உயரும். ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இதற்குத்தான் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

AlsoRead

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிப்பதுபோல், எம்.பி. தொகுதியின் பரப்பளவு அதிகமாக இருக்கும் போது, நிர்வாக வசதிக்காக அதை இரண்டாக பிரிக்கலாம். அதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களின் எம்.பி. சீட்டுகளை கூட்டவோ, குறைப்பதோ செய்தால், வட மாநிலங்களில் மட்டுமே வெற்றி பெரும் ஒரு தேசிய கட்சி, எளிதாக ஆட்சியைப் பிடித்துவிட முடியும். ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டும் ஆதரவான திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்த முடியும். ஆனால் எதிராக இருக்கும் தென் மாநிலங்களை புறக்கணிக்கும் போக்கு அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கெனவே வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற கோஷம் தமிழகத்தில் பிரபலம். அதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் வடக்கில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்து தெற்கில் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யாமல் விட்டாலும் அதுவும் தென் மாநிலங்களுக்கு செய்யும் துரோகமாகத்தான் இருக்கும். இதனால் தான் தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன. குறிப்பாக தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளதும் இதற்காகத்தான். பொதுவாக தமிழக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கையும் பா.ஜ.க.,விற்கு எதிரானது என்ற மனப்போக்கினை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழக அரசு எதற்கெடுத்தாலும் தங்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்ற பா.ஜ.க.,வின் புகார்… இது போன்ற உண்மையான, மிகவும் அக்கரையான விஷயங்களை கூட மூடிவிடக்கூடாது என தி.மு.க.,வினர் வலுவாக வாதிட்டு வருகின்றனர்.

Previous Post

போப்பிரன்சிஸ்-க்கு என்ன தான் பிரச்னை?

Next Post

அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளும் த.வெ.க, அ.ம.மு.க

Related Posts

Vikram Misri

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026
Rahul Gandhi

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

05/03/2026

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

05/03/2026

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா – முழு விவரம்!

04/03/2026

சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது – தரிசன நேரத்தில் மாற்றம்!

03/03/2026

ஈரான் – இஸ்ரேல் மோதல்: இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேச்சு

02/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved