Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மறுபடியும் துளிர்க்கிறது போஃபர்ஸ் வழக்கு? அமெரிக்காவுக்கு சிபிஐ கடிதம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
05/03/2025
in இந்தியா
0
மறுபடியும் துளிர்க்கிறது போஃபர்ஸ் வழக்கு? அமெரிக்காவுக்கு சிபிஐ கடிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

2011ம் ஆண்டில் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்ட போஃபர்ஸ் ஊழல் வழக்கு இப்போது புத்துயிர் பெறப்போவதாகக் கருதப்படுகிறது.

AlsoRead

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

1980ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இந்தியாவை அதிர வைத்தது போஃபோர்ஸ் ஊழல் வழக்கு. 1989ம் ஆண்டில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியைப் பறிகொடுத்ததற்கு இந்த ஊழல் குற்றச்சாட்டு முக்கியப் பங்கு வகித்தது. 2011ம் ஆண்டில் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்ட இந்த வழக்கு இப்போது மீண்டும் புத்துயிர் பெறப்போவதாகக் கருதப்படுகிறது.

போஃபோர்ஸ் ஊழல் தொடர்பாக தனியார் துப்பறிவாளர் மைக்கேல் ஹெர்ஷ்மேன் இடம் உள்ள முக்கிய தகவல்களை வழங்கக் கோரி அமெரிக்க அரசுக்கு இந்தியாவின் சிபிஐ, கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.

1986ம் ஆண்டில் ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்தபோது ஸ்வீடனைச் சேர்ந்த AB Bofors என்ற நிறுவனத்திடம் ஆயிரத்து 433 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டது.

இதற்காக இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு போஃபோர்ஸ் நிறுவனம் ரூ.64 கோடி லஞ்சம் கொடுத்ததாக ஸ்வீடன் வானொலி நிறுவனம் 1987ம் ஆண்டில் செய்தி வெளியிட்டது.

1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததில், போஃபோர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு முக்கியப் பங்கு வகித்தது. 1990ம் ஆண்டில் போஃபோர்ஸ் வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. 1991ம் ஆண்டில் வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி உயிரிழந்தார்.

போஃபோர்ஸ் ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக இத்தாலிய வணிகர் ஒட்டாவியா குவாட்ரோச்சி மீது 2000ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2004ம் ஆண்டில் அப்போது உயிரிழந்துவிட்ட ராஜிவ் காந்தி உள்பட குற்றம்சாட்டப்பட்டிருந்த அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 2011ம் ஆண்டில் குவாட்ரோச்சியும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து போஃபோர்ஸ் வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், போஃபோர்ஸ் லஞ்சப் பணம் செலுத்தப்பட்டிருந்த ஸ்விஸ் வங்கிக் கணக்கை, தான் கண்டறிந்தபோது ராஜீவ் காந்தி மிகவுன் ஆத்திரம் அடைந்ததாக துப்பறிவாளர் மைக்கேல் ஹெர்ஷ்மேன் 2017ம் ஆண்டு கூறினார்.

இதன் அடிப்படையில் அமெரிக்காவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப உள்ளதாக கடந்த அக்டோபரில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்திருந்தது. சிபிஐயின் இந்த நடவடிக்கையின் மூலம் போஃபோர்ஸ் வழக்கு புத்துயிர் பெறும் என்று கருதப்படுகிறது.

Tags: bofors scandalbreaking newsTamilnadu News
Previous Post

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகம்

Next Post

அதிக விலைக்கு மருந்துகள் விற்கும் மருத்துவமனைகள்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Related Posts

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

11/05/2025
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

11/05/2025

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

11/05/2025

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

11/05/2025

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

10/05/2025

இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த சீனா விருப்பம்

10/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved