Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பெகல்காம் தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
25/04/2025
in இந்தியா
0
பெகல்காம் தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பெகல்காமில் தாக்குதல் நடத்த உதவியாக இருந்த 2 தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து இந்திய ராணுவத்தினரால் தகர்க்கப்பட்டது.

AlsoRead

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பெகல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.

இதற்கிடையே, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முகாம்களில் இருந்து ஊடுருவியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறினார்கள்.

நேற்று முன்தினம் நள்ளிரவு சில முகாம்கள் மீது பாகிஸ்தான் எல்லைப் பகுதி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு இந்திய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர். நேற்று காலைவரை எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே விடியவிடிய துப்பாக்கி சண்டை நீடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன்.

இதுகுறித்து இந்திய பாதுகாப்பு படையினர், “எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே காஷ்மீரில் தீவிரவாதிகளை தேடிப் பிடித்து அழிப்பதற்கு பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில், பஹல்காமில் தாக்குதல் நடத்த உதவி செய்ததாக காஷ்மீரைச் சேர்ந்த 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்கியிருந்த வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குல்னர் என்ற இடத்தில் இருந்த தீவிரவாதி ஆசீப் ஷேக்கின் வீடு குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. அதுபோல, அனந்தநாக் மாவட்டத்தில் பிஜ்பெரா என்ற இடத்தில் இருந்த மற்றொரு தீவிரவாதியான அடில் உசேன் தோக்கர் வீடும் நேற்று காலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையில் 2 தீவிரவாதிகளின் வீடும் தரைமட்டமாக்கப்பட்டன. அவர்களது வீடுகளுக்குள் சில வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து அவர்களை வேட்டையாடுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில் 2 ராணுவ வீரர்களும், ஒரு போலீஸ் அதிகாரியும் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Houses of Pahalgam terroristsPahalgam terror attack
Previous Post

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் காலமானார்

Next Post

இ.பி.எஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் : சைபர் க்ரைம் போலீசார் விசாரணை

Related Posts

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

11/05/2025
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

11/05/2025

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

11/05/2025

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

11/05/2025

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

10/05/2025

இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த சீனா விருப்பம்

10/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved