Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை  உணர முடிகிறது : பிரதமர்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
27/04/2025
in இந்தியா
0
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

‘பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது’ என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது தெரிவித்தார்.

AlsoRead

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

மன் கி பாத் நிகழச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பார்த்த ஒவ்வொரு இந்தியனின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. இந்த தாக்குதல் சம்பவம், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களின் பதற்றத்தை காட்டுகிறது. அவர்களின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

கடுமையான பதிலடி

தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளும், அவர்களை வழிநடத்துபவர்களும், காஷ்மீரை மீண்டும் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல விரும்புகின்றனர். எனவேதான் இப்படி ஒரு சதித்திட்டத்தை தீட்டி செயல்படுத்தி உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் நமது தேசத்தின் மகத்தான மன உறுதியை நாம் வெளிப்படுத்தியாக வேண்டும்.

ஒற்றுமையே பலம்

இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாம் என்ன செய்கிறோம் என்று உலகம் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. மொத்த நாடும் ஒரே குரலில் பேசிக் கொண்டிருப்பதை இந்த உலகம் பார்க்கிறது. அமைதி திரும்ப தொடங்கிய நேரத்தில், வளர்ச்சி பொறுக்காமல் காஷ்மீரை அழிக்க நினைக்கிறார்கள். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நமது ஒற்றுமையே பலம்.

டாக்டர் கஸ்தூரி ரங்கனுக்கு அஞ்சலி

சமீபத்தில் காலமான விஞ்ஞானி டாக்டர் கஸ்தூரி ரங்கன், புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார். 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப தொலைநோக்குப் பார்வை கொண்ட யோசனைகளை அவர் முன்வைத்தார். அவருக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரை இறங்கும் நிகழ்வுக்காக நான் பெங்களூரு இஸ்ரோ மையத்துக்கு சென்றிருந்தேன்.

தோல்வியில் கிடைத்த வெற்றி

அப்போது எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. திட்டம் தோல்வியை தழுவியது. அது விஞ்ஞானிகளுக்கு மிகவும் சிரமமான காலம். ஆனால் விஞ்ஞானிகளின் பொறுமையையும், சாதிக்கத் துடிக்கும் அவர்களது ஆர்வத்தையும் நான் கண்டேன்.அடுத்த சில ஆண்டுகளில், சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கச் செய்து அதே விஞ்ஞானிகள் சாதனை படைத்ததை மொத்த உலகமும் கண்டு அதிசயம் அடைந்தது.

இந்தியா மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்தை செயல்படுத்தியது. ஆதித்யா எல் ஒன் திட்டம் மூலம் சூரியனுக்கு மிக நெருக்கமாக நமது விண்கலம் சென்றது. இன்றைய உலகில் மிகவும் குறைந்த செலவில் மிகவும் வெற்றிகரமான விண்வெளித் திட்டம் என்பது இந்தியாவின் திட்டம் தான். உலகின் பல நாடுகள் விண்வெளித் திட்டங்களுக்கும் செயற்கை கோள்களுக்கும் இஸ்ரோவின் உதவியை நாடுகின்றன.

சாதனைக்கான ஆர்வம் மட்டும் இருந்தது

விண்வெளித் திட்டம் தொடங்கிய காலத்தில், தற்போது இருப்பதைப் போன்ற நவீன வசதிகள் எதுவும் நமது விஞ்ஞானிகளுக்கு இல்லை; தொழில் நுட்பமும் அப்போது நம்மிடம் இல்லை. ஆனால் நாட்டுக்காக ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடம் இருந்தது. நமது விஞ்ஞானிகள், ராக்கெட் உபகரணங்களை மாட்டு வண்டியிலும், சைக்கிள்களிலும் கொண்டு சென்ற அந்த படங்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு விண்வெளி நிறுவனம் மட்டுமே இந்தியாவில் செயல்பட்டு வந்தது. ஆனால் இன்று 325 விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. ககன்யான், ஸ்பேடக்ஸ், சந்திரயான் 4 ஆகிய முக்கிய திட்டங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. வீனஸ் ஆர்பிட்டர் மிஷன், மார்ஸ் லேண்டர் மிஷன் ஆகிய திட்டங்களிலும் விஞ்ஞானிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்

சமீபத்தில் மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர். அந்த நாட்டுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் இந்திய ராணுவம் ஆபரேஷன் பிரம்மா என்ற திட்டத்தை செயல்படுத்தியது. விமானப்படை விமானங்கள் முதல் கடற்படை கப்பல்கள் வரை மியான்மர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு ஒரு நடமாடும் மருத்துவமனை உருவாக்கப்பட்டது. சேதமடைந்த முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள், கட்டமைப்புகளை சீர் செய்ய பொறியாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வைகள், கூடாரங்கள், மருந்து பொருட்கள், உணவுப் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags: NarendramodiPahalgam terror attackPM ModiPrime Minister
Previous Post

ஆசை வார்த்தைகளால் என்னை வளைக்க முடியாது : திருமாவளவன் பேச்சு

Next Post

பகல்காம் தீவிரவாத தாக்குதல் : விசாரணையை தொடங்கிய தேசிய புலனாய்வு அமைப்பு

Related Posts

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

11/05/2025
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

11/05/2025

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

11/05/2025

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

11/05/2025

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

10/05/2025

இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த சீனா விருப்பம்

10/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved