ஆரணி நகரிலிருந்து பழைய ஆற்காடு சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளதால் ஆரணி- இரும்பேடு செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக அரசுப்பணிமனைக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றக்கோரி ஏற்கெனவே ஒரு மாதத்திற்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். மேலும் 10 நாட்களுக்கு முன்பு நினைவூட்டல் நோட்டீசும் அனுப்பினர்.
நெடுஞ்சாலைத்துறையினர் கொடுத்த காலக்கெடு முடிந்ததால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் உதவி கோட்டப்பொறியாளர் நாராயணன் தலைமையில் உதவிப்பொறியாளர் வரதராஜன், கள ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் சாலைப்பணியாளர்கள் ஜேசிபி மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்தனர். ஆரணி இன்ஸ்பெக்டர்கள் அகிலன், செந்தில்விநாயகம், எஸ்.ஐக்கள் அருண்குமார், ஆனந்தன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன.



