கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாதவச்சேரி, பால்ராம்பட்டு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நேற்று மாதவச்சேரி தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுகழக செயலாளரும், சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தா.உதயசூரியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களின் அடிப்படையில் பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
முகாமில், கள்ளக்குறிச்சி ஒன்றிய குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அரவிந்தன், சின்னசேலம் வட்டாட்சியர் பாலகுரு,வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளரும், மாதவச்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான எம்.பி.அருள், மாதவச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி வேலண்ணா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



