தேசியதன்னார்வரத்ததான தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி தன்னார்வ ரத்த தான தினம் கொண்டாடப்பட்டது.
62 தன்னார்வ ரத்ததான முகாம்கள் மூலம் 2,482 ரத்த அலகுகள் பெறப்பட்டன. மற்றும் அரசு மருத்துவமனை மற்றும்மருத்துவக் கல்லூரி மூலமாக 5,318 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு 100 ரத்த அலகுகளுக்கு மேல் சேகரித்த 15 தன்னார்வ முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் மருத்துவ கல்லூரி முதல்வர் மோகன் காந்தி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மருத்துவர்கள். செவிலியர்கள். கல்லூரி மாணவ மாணவிகள். உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ மேலாளர் டாக்டர்மாலதி, நோயியல் துறை தலைவர் டாக்டர். ராதிகா,ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர். பவித்ரா,மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் மாவட்ட திட்ட மேலாளர் கவிதா உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.



