இரவு பகல் பாராமல் எந்த இடத்திலும் பொதுமக்களுக்கான சேவைசெய்வதுதிராவிடமாடல் அரசு என்று அமைச்சர் ஐ.பெரியசாமிபெருமிதத்தோடு தெரிவித்தார்.
திமுக துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி சென்னையில் திமுக சார்பில் நடைபெறும் “என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி” கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் ரயில்நிலையததிற்கு வந்தார். அப்போது அவரிடம் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்து தீர்வு பெற்றனர்.
பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-
“கட்சி நிர்வாகிகள் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபடவேண்டும். இரவு பகல் பாராமல் எந்த இடத்திலும் பொதுமக்களுக்கான சேவை செய்வது திராவிட மாடல் அரசு.
தினசரி 1 மணி நேரம் பொதுமக்களை சந்தித்து தமிழக முதல்வரின் சாதனைத் திட்டங்களை எடுத்துரைக்க மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முன் வரவேண்டும். வேண்டும். உங்கள் பகுதி இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
அப்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஆ.நாகராஜன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, பிள்ளையார் நத்தம் முருகேசன் ரெட்டியார்சத்திரம் மணி, இன்பராஜ், திண்டுக்கல் மாநகர செயலாளர் ச.ராஜப்பா, பொருளாளர் மீடியா சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



