திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மண்மலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி வந்த அரசு பேருந்து நகருக்குள் செல்வதற்காக திரும்பிய போது கர்நாடக மாநிலத்திலிருந்து புதுச்சேரி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது காருக்குள் சிக்கிக் கொண்டிருந்த ஆறு பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சிகிச்சைக்காக செங்கம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஆறு பேரும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்
திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை குறுகிய சாலையாக உள்ளதாலும் சாலையின் வளைவு பகுதி மற்றும் நகருக்குள் பிரிந்து செல்லும் சாலைக்கு முன்பு எந்த ஒரு அறிவிப்பு பலகையும் வைக்கப்படாததாலும் அப்பகுதியில் தொடர் விபத்து ஏற்பட்டு கடந்த சில மாதங்களில் 20 மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். பலர் பலத்த காயம் ஏற்பட்டு உடல் ஊனம் அடைந்துள்ளனர்.
நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து நாள்தோறும் ஏற்படும் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



