தி.மலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துகொண்டுஇருக்கின்றார்கள்.
கடந்த வாரம் 3 ஆம் தேதி 2668 உயரம் கொண்ட அண்ணாம லையார் மலை மேல் மகா தீபம் சிறப்பாக ஏற்றப்பட்டு ஐந்து நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் காவலர்கள் கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டம் அதிகம் இல்லாத நிலையிலும் கோவிலுக்கு வெளியே பல மணி நேரமாக நின்று கொண்டு இருக்கும் பக்தர்களையும், பணிபுரியும் பணியாளர்களையும், செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களையும் கோயிலுக்குள் செல்ல வழிவிடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தும் உள்ளே செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள் அண்ணாமலையார் திருக்கோயிலைகாவலர்களின் காவல் நிலையங்கள் போல வைத்துக்கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்களை மிகவும் துன்புறுத்துவதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வேதளையுடன் தெரிவிக்கிறார்கள்.
இதனால் இந்து சமய அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும் இந்தக்காவலர்களின் அராஜக நடவடிக்கையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.
அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அதிகமாக இல்லாத நிலையிலும் அம்மணி அம்மன் கோபுரத்தின் முன் பக்தர்களை காக்க வைத்து பக்தர்களை தரக்குறைவாகப் பேசி 20நிமிடத்திற்கு 10 பேர் என்று உள்ளே அனுமதித்த காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, காவலர் மனோகரன் உள்ளிட்ட காவலர்கள் பற்றி மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரித்து சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.



