Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
06/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

வந்தவாசி அடுத்த கெங்கம் பூண்டி கிராமத்தில் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வந்தவாசி அடுத்த கெங்கம் பூண்டி கிராமத்தில் முனீஸ்வரன் கோயில் உள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் (53) என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3-ம் தேதி இரவு வழக்கம் போல் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் கோயில் கருவறை பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டதால் அவ்வழியாக விவசாய வேலைக்கு சென்ற ஒருவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார்.

அக்கம் பக்கத்தினர் வந்து திருடர்கள் 3 பேர் கோயிலில் இருந்து தப்பி ஒரே பைக்கில் தேசூர் சாலை நோக்கி மின்னல் வேகத்தில் சென்றனர். உடனடியாக இதுகுறித்து தேசூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வடக்குபட்டு சாலையில் ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சாய்ராம் தலைமையிலான போலீசார் பைக்கில் வந்த மர்ம நபர்களை தடுத்து நிறுத்தினர்.

போலீசாரை கண்டதும் வந்த வழியே திரும்ப முயன்றவர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை செய்ததில் கோயில் மணி, தாம்பூல தட்டு, ரொக்கப் பணம் 500 இருந்தது தெரிய வந்தது.

விசாரணை செய்ததில் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா சிறுதாம்பூர் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் ரூபிரவீஸ் (19) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் எனவும், கோயில் வெளிப் பகுதியில் இருந்த பூட்டை உடைத்து பணம், மணி, தாம்பூல தட்டு திருடியது தெரிய வந்தது.

கருவறையில் இருந்து நகையை திருடுவதற்காக பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்து பைக்கில் தப்பியதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, திருவண்ணாமலை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி 2 சிறுவர்களை கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
ரூபிரவீஸை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனர்

Tags: 3 பேர் கைதுகொள்ளைகோயில் உண்டியல்
Previous Post

11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

Next Post

கோர்ட் அவமதிப்பு வழக்கு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved