Friday, July 31, 2026
32 °c
Tiruvannamalai
32 ° Sat
32 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

– நயினார் நாகேந்திரன்

admin by admin
31/07/2026
in தமிழ்நாடு
0
ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஆவின் பாலில் ரசாயன நெடி வீசுவதாகவும், சேத்தியாதோப்பில் மாவு கலப்படம் நடைபெறுவதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்டக் குழு அமைத்து அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக், குளோரின் மற்றும் மருந்து நெடி வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், மறுபுறம் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் பாலில் மரவள்ளிக்கிழங்கு மாவு, அகர் அகர் உள்ளிட்ட பொருட்கள் கலந்து கலப்படம் செய்யப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

AlsoRead

தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்

3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்

காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்

மக்களின் உடல்நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான கலப்பட குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்துவது அரசின் நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாகவும், முறையான தரக் கட்டுப்பாட்டு பரிசோதனைகள் இல்லாமல் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஆவின் பாலில் ரசாயன நெடி மற்றும் சேத்தியாதோப்பு மாவு கலப்படம் தொடர்பான இரு விவகாரங்களையும் விசாரிக்க உயர்மட்டக் குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகள் உறுதியானால் சம்பந்தப்பட்ட ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு தரமான மற்றும் தூய்மையான பால் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: ஆவின் பால் விவகாரம்நயினார் நாகேந்திரன்
Previous Post

தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்

Related Posts

தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்

தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்

31/07/2026
3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்

3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்

31/07/2026

காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்

31/07/2026

மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு

30/07/2026

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

30/07/2026

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்

30/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்
  • தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்
  • 3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்
  • காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்
  • ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved