ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் தனது வளர்ப்புத் தாயுடன் கடந்த 29-9-2025 அன்று இரவுகாளஹஸ்தியில் இருந்து வாழைத்தார் ஏற்றிவந்த மினி வேனில் திருவண்ணாமலைமார்க்கெட்டுக்குவந்திருக்கிறார். காய்கறி மண்டியில் லோடு இறக்கிய பிறகு, மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் மீண்டும் ஆந்திராவை நோக்கி புறப்பட்டிருக்கின்றனர்.
புறநகர் பகுதியில் சென்று காத்திருந்தபோது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலைய காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இருவரும் சீருடையில் சென்று இரு பெண்களிடமும் விசாரித்திருக்கின்றனர். ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்ததையடுத்து, துணைக்கு வேறு யாரும் வராததை உறுதி செய்து கொண்டு இரு பெண்களையும் மிரட்டி தங்களுடன் அழைத்துசென்றிருக்கின்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத ஏரிக்கரை பகுதிக்குச் சென்றவுடன் இளம்பெண்ணை இரு காவலர்களும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். தனது கண்ணெதிரிலேயே, தனது வளர்ப்பு மகள் காமவெறிப் காவலர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை தடுக்க முடியாமல் கதறியிருக்கிறார்,
அந்தத் தாய்.
இந்த விவகாரம் வெளியில் தெரியவந்ததையடுத்து, காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் இருவரும் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
துறை ரீதியாகவும் உடனடியாக இருகாவலர்களும் இடைக்கால பயணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
விசாரணையின்போது இரு காவலர்களும் பாலியல் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் 2.10.2025 அன்று பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டனர்.
உத்தரவு பிறப்பித்தார். கைதாகி விசாரணையில் இருந்த அந்த இரு காவலர்களையும் குண்டார் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேற்று



