வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் பெரும்பாலான பொதுமக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இங்கு சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் நெல்லூர் பேட்டை ஏரி அருகே இருப்பதால் தொடர்மழையின் காரணமாக மோர்தனா அணை நிரம்பி கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லூர் பேட்டை ஏரி நிரம்பி அருகே இருக்கும் லிங்குன்றம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து கார்த்திக் என்பவர் பயிரிட்டு இருந்த சுமார் 700 வாழை மரங்கள் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.
அது மட்டும் இன்றி அருகே இருக்கும் விவசாயிகளின் நிலத்தில் பயிரிட்டு இருந்த வேர்க்கடலை, வெண்டைக்காய், உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் கிராமத்திற்கு வந்து விளை நிலங்களை பார்வையிட்டு சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



