கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் ரூ.3கோடியோ 76 இலச்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பணியை நேற்று தொடங்கிவைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 இலட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிட அடிக்கல் நாட்டு விழா, கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி சிறப்பு நிதி திட்டம் 2025-26ம் ஆண்டில் அவலூர்பேட்டை சாலை முதல் திண்டிவனம் சாலை வரை மற்றும் மேட்டுப்பாளையம் முதல் நெடுங்காம்பூண்டி வரையில் தார் சாலை ரூ.56 இலட்சத்தில் அமைத்தல் ஆகிய பணிகளுக்காக அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நெடுங்காம்பூண்டியில் நீண்ட நாள் கோரிக்கையை நிவரத்தி செய்யும் வகையில் பணிக்காக ரூ.1 கோடி மதிப்பிலான உயர்மட்ட பாலத்தின் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
நகர செயலாளர் சி.கே.அன்பு தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், பேரூராட்சி தலைவர் கோ.சரவணன் மற்றும் உதவி பொறியாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகிக்க பேரூராட்சி செயல்அலுவலர் வெ.இராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு புதிய கட்டிடங்கல் கட்டுவதற்கான பணியினை தொடங்கிவைத்தார்.
அப்போது கீழ்பென்னாத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் அனிதா, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக கோரிக்கையை முன்வைத்து பேசினார். அப்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பள்ளிக்கு பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி விரைவில் நடைபெறும் என உறுதியளித்தார்.
இதில், முன்னாள் பேரூராட்சி தலைவர் சி.கே.பன்னீர்செல்வம், பேரூராட்சி துணைத்தலைவர் சு.தமிழரசி சுந்தரமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் இரா.சரவணன், மாவட்ட பிரதிநிதி பழனி, பேரூராட்சி கவுன்சிலர்கள் அ.பாக்கியராஜ், க.ஏழுமலை, ம.ஜீவா, சு.அம்பிகா, சீ.தமிழ்குடிமகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் நகர துணை செயலாளர் இளங்கோ, லோகிதாசன் நன்றி கூறினர்.



