Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளமின்றி கிராம மக்கள் அவதி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
04/02/2025
in மாவட்டங்கள்
0
100 நாள் வேலை திட்டத்தில் சம்பளமின்றி கிராம மக்கள் அவதி
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3 மாதங்களாக சம்பளம் வழங்காததால் கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியாவில் வறட்சி காலங்களில், கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு கருதி, குளம், வரத்து வாய்க்கால் தூர்வாருதல். மண் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, காங்., ஆட்சி காலத்தில் 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. 

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

காலம் செல்லச் செல்ல, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் எந்த பணிகளும் முறையாக நடைபெறவில்லை என்றும், தொழிலாளர்கள் பெயரளவில் மட்டுமே வேலை பார்ப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளன.

இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.319 சம்பளம் வழங்கி வருவதால், ஊராட்சி வாரியாக ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த தீபாவளியை முன்னிட்டு, இவர்களுக்கு அக்டோபரில் சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது, மூன்று மாதங்களைக் கடந்த நிலையில், இன்னும் 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இந்த வேலையை மட்டுமே நம்பியுள்ள குடும்பங்கள், மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. தங்களது உணவு தேவைக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட மக்களின் நலன் கருதி, 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

இதுகுறித்து பா.ம.க. வேடசந்தூர் தொகுதி செயலாளர் கணேசன் கூறியதாவது: 

கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் இந்த 100 நாள் வேலை திட்டத்தில், 90 சதவீத மக்கள் ஏழை எளிய மக்கள் தான் செல்கின்றனர். மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு மிகுந்த அவதிப்படுகின்றனர். வாரச்சந்தைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. 

இதனால் தொழிலாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர். ஊராட்சி தலைவர்கள் இல்லாததால், சம்பளம் வருமா, வராதா என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  

எனவே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் நலம் கருதி, அவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, மத்திய மாநில அரசுகள் முறையாக விரைந்து வழங்க வேண்டும் என்றார்.

Tags: 100day workDindigul NewsTamil News Today
Previous Post

புழலில் ரூ. 11.90 கோடியில் அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டு திடல்- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

Next Post

மணல் கொள்ளை ஜோர் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

வந்தவாசி அருகே 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved