Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கவுன்சிலர்களின் சரமாரி கேள்வி; பெண் பொறியாளர் கண்கலங்கிய சம்பவம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
27/03/2025
in மாவட்டங்கள்
0
கவுன்சிலர்களின் சரமாரி கேள்வி; பெண் பொறியாளர் கண்கலங்கிய சம்பவம்
0
SHARES
91
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திண்டிவனம் நகர மன்ற அவசரக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால், பெண் இளநிலை பொறியாளர் கண்கலங்கிச் சென்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

திண்டிவனம் நகர மன்ற அவசரக் கூட்டம் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் உள்ளிட்ட 23 கவுன்சிலர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்ததால், கூட்டம் 20 நிமிடம் தாமதமாகத் தொடங்கியது.

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

கூட்டத்தில், கடந்த 2022ஆம் ஆண்டு நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்கும், புதிய மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்குகள் அமைப்பதற்கும் தமிழக அரசு ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கிய நிலையில், இதுவரை அந்த நிதி பயன்படுத்தப்படவில்லை என்று திமுகவைச் சேர்ந்த 13-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பாபு குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, திண்டிவனம் 26-வது வார்டில் கடந்த பெஞ்சல் புயலில் உடைந்த பாலம் இதுவரை செப்பணிடப்படாத நிலையில், வரும் நிதியாண்டில் ஏப்ரல் மாதம் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிந்திருந்தும், நகராட்சி நிதியிலிருந்து ரூ.8 லட்சம் செலவில் தற்காலிக பாலம் அமைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது ஏன் என்று 33-வது வார்டு கவுன்சிலர் சின்னசாமி ஆணையரிடம் கேள்வி எழுப்பினார்.

பின்னர், 31-வது வார்டு பாமக கவுன்சிலர் மணிகண்டன், கடந்த 3 ஆண்டுகளாக சாலை வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சி நிர்வாகம், வரி மட்டும் ஏன் கடுமையாக வசூல் செய்கிறது? இதற்கு நான் ஏன் நகர மன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

திமுக கவுன்சிலர் ரம்யா ராஜா பேசுகையில், கவுன்சிலர் கேட்கும் கேள்விகளுக்கு நகர மன்ற தலைவர் மட்டுமே பதில் கூறுவதை விட்டுவிட்டு, வேறொரு கவுன்சிலரை பதில் அளிக்கச் சொல்வது ஏன்? இனிமேல் இதுபோல் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.

அதேபோல், நான்காவது வார்டு திமுக பெண் கவுன்சிலர் லதா சாரங்கபாணி, தனது வார்டில் சமுதாயக் கூடம் கட்டப்பட்ட நிலையில், அதற்கு மேலும் மேல் தளம் அமைக்கப்பட வேண்டும் என மனு கொடுத்திருந்தும், அதிகாரிகள் ஏன் அதற்குரிய திட்ட மதிப்பீட்டை கொடுக்கவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனால் திடீரென்று நகராட்சி பெண் இளநிலை பொறியாளர் கண் கலங்கியபடி வெளியேறிய சம்பவம், அங்கு சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

Tags: Councilors' barrage of questionsTindivanam News
Previous Post

தமிழ்நாடு வானிலை மைய இணைய பக்கத்தில் இந்தி : மீண்டும் சர்ச்சையில் இந்தி திணிப்பு

Next Post

‘பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி விலகுவதே மரியாதை’ : ஓபிஎஸ் பகீர் பேச்சு

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved