Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திண்டிவனம் அருகே நள்ளிரவில் ஆடுகளைத் திருடிய கும்பலைச் சுற்றி வளைத்த கிராம மக்கள்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
21/03/2025
in மாவட்டங்கள்
0
திண்டிவனம் அருகே நள்ளிரவில் ஆடுகளைத் திருடிய கும்பலைச் சுற்றி வளைத்த கிராம மக்கள்
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திண்டிவனம் அருகே நள்ளிரவில் காரில் வந்து ஆடுகளைத் திருடியபோது கிராம மக்கள் அவர்களைச் சுற்றி வளைத்தனர்.

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் காரில் வந்த ஆடு திருடர்கள் மாலா என்பவரது வீட்டில் கட்டியிருந்த ஆடுகளைத் திருடி காரில் ஏற்றினர். அப்போது மாலா கூச்சலிடவே கிராம மக்கள் காரை நோக்கி ஓடி வந்தனர். இதனால் அந்தக் கும்பல் காரை விட்டுவிட்டு தப்பி ஓடியது. காரில் வந்த ஒரு பெண் உட்பட 3 பேர் இந்த ஆடு திருட்டில் ஈடுபட்டதாக கிராம மக்கள் ஒலக்கூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ஒலக்கூர் போலீசார், பொதுமக்கள் சிறைபிடித்த காரை சோதனையிட்டதில் அந்தக் கார் போலி பதிவு எண் கொண்டது எனத் தெரியவந்தது. இதனை அடுத்து கார் மற்றும் ஆடுகளை காவல் நிலையம் எடுத்து வந்து தப்பி ஓடிய ஆடு திருடர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஆடு திருட்டு சம்பவத்தில் தப்பி ஓடியவர்களில் ஒரு பெண் மட்டும் போலீசில் பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஊமங்கலம் சிவக்குமார் மனைவி சரோஜினி தேவி என்றும், இந்த ஆடு திருட்டில் தன்னுடன் ஈடுபட்டது காஞ்சிபுரம் லோகன் மகன் சரத்குமார் மற்றும் தாம்பரம் செல்வகுமார் மகன் வெற்றி என்றும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சரோஜினி தேவி அளித்த தகவலின் பேரில் தப்பி ஓடிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனை அடுத்து ஆடு திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: stole sheepTindivanam News
Previous Post

கடலூர் அருகே சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கைது

Next Post

திருக்கோவிலூர் அருகே ஒரே மாதத்தில் மீண்டும் சேதமான பாலம்

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

வந்தவாசி அருகே 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved