Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

விழுப்புரம் அருகே வாய்க்கால் சீரமைப்பு பணிகளை

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

admin by admin
27/08/2024
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
விழுப்புரம் அருகே வாய்க்கால் சீரமைப்பு பணிகளை
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஏனாதிமங்கலத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டு வரும் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டுமானப்பணி மற்றும் அணையிலிருந்து செல்லும் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

விழுப்புரம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் வட்டங்கள் ஏனாதிமங்கலம் மற்றும் சுப்பூர் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1949-1950ம் ஆண்டு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது.

இந்த அணைக்கட்டில் உள்ள வலது புற பிரதான கால்வாய்களான எரளூர், ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடது புற பிரதான கால்வாய்களான ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என மூன்று வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கும். மொத்தம் 13,100 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

2021-ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாகவும், ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் காரணமாகவும், அணைக்கட்டு சேதமடைந்தது. இதனால் இவ்வணைக்கட்டின் மூலம் பாசன வசதி பெற்று வந்த விவசாயிகளுக்கு பாசன வசதி குறைந்தது.

 இதனையடுத்து சேதமடைந்த அணைக்கட்டினை சீரமைத்திடும் வகையில், 2023 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் சேதமடைந்த அணைக்கட்டினை ரூ.86.25 கோடி மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்ய அறிவிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புதிய அணைக்கட்டு அமைவிடத்தை, கட்டுமான வல்லுநர்கள் கட்டுமான வடிவமைப்பு வட்டம், சென்னை அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு உரிய மண் பரிசோதனை மற்றும் ஆற்றின் புவியியல் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்து கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

மேலும், அணைக்கட்டின் அருகில் கரைகளின் இருபுறமும் கான்கிரீட் வெள்ளதடுப்பு சுவர் மற்றும் வெள்ளத்தடுப்பு கரை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் வட்டங்கள், ஏனாதிமங்களலம் மற்றும் கப்பூர் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே எல்லிஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்த அணைக்கட்டின் மூலம் எதிர்வரும் பருவ மழைக்காலத்தில் தென்பெண்ணையாற்றில் பெறப்படும் நீரினை வலதுபுற பிரதான கால்வாய்களான எரளுர் மற்றும் ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடதுபுற பிரதான வாய்க்கால்களான ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என மூன்று வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கும் மொத்தம் 13100 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. 

மேலும், அணைக்கட்டினை சுற்றியுள்ள 36 கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் மேம்படும்.

அதனடிப்படையில், இன்றைய தினம், ஏனாதிமங்கலத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டு வரும் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டுமானப்பணி மற்றும் அணையிலிருந்து செல்லும் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுதுவரை 99 சதவீதம் அணைகட்டு கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 1 சதவீதம் பணியானது பத்துநாட்களுக்குள் முடிக்கப்பட்டு விடும்.

நீர்வளத்துறை வல்லுநர் குழுவின் அடிப்படையில், அணைக்கட்டு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு கட்டுமான முடிவிலும் தர நிர்ணயம் செய்யப்பட்டு அடுத்தடுத்த நிலையிலான கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது அணைக்கட்டான நல்ல முறையிலும், உறுதியான நிலையிலும் கட்டப்பட்டுள்ளது.

அணையிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் பகுதிகளில் முதல் 100 மீட்டர் அளவிற்கு கான்கிரிட் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த வரக்கூடிய வாய்க்கால் பகுதிகள் 500 மீட்டர் வரை தூர்வாரப்பட்டுள்ளது. தூர்வாரப்பட்ட வாய்க்கால் பகுதிகளில் கரையோரப்பகுதிகளில் மண்கொட்டப்பட்டது. தற்பொழுது பெய்த மழையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக நிரந்தரமாக சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு பக்கங்களில் கரைகள் அமைத்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அணைக்கட்டில் 500 மீட்டர் அளவிற்கு பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைத்திடவும் திட்ட மதிப்பீடு தயார் செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, நீர்வளத்துறை, செயற்பொறியாளர் ஷோபனா, உதவி செயற்பொறியாளர் ஐயப்பன், உதவி பொறியாளர் மனோஜ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags: விழுப்புரம் மாவட்டம்
Previous Post

கலசப்பாக்கம் அடுத்த ஜவ்வாது மலையில் கோடை விழா முன்னேற்பாடுகள்

Next Post

சிவாஜி கணேசன் திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் நாட்டுப்பற்றுக் கொண்டவர்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved