கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து போளுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த செல்வம் மகன் ஹரி(23) அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் தொடர்பாக ஹரியின் தந்தை செல்வம் ஆரணி நீதிமன்றத்தில் விபத்து நஷ்ட ஈடு வழக்கு தொடுத்தார்.
கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி விஜயா இதை விசாரித்து ரூ.18லட்சம் இழப்பீடு தொகையாக மனுதாரருக்கு வழங்க அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.
ஆனால் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை இதனால் மனுதாரர் அளித்த மேல்முறையீட்டில் கடந்த மாதம் ஆரணி நீதிபதி ஜெயஸ்ரீ விபத்து இழப்பீட்டுத் தொகை மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து 23 லட்சம் ரூபாய் வழங்க தீர்ப்பு வழங்கினார்.
ஆயினும் தொடர்ந்து விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் நேற்று நீதிமன்ற அதிகாரிகள் ஆரணி டவுன் கார்த்திகேயன் சாலை அருகில் சென்னையிலிருந்து போளுர் நோக்கி சென்ற 204 தடம் எண் கொண்ட அரசு பேருந்தை ஜப்தி செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.



