Friday, August 7, 2026
29 °c
Tiruvannamalai
31 ° Sat
31 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரிக்கை: ஆட்சியரிடம் மனு அளித்த கேரள ஆசிரியை

Balaji by Balaji
20/03/2026
in இந்தியா, கட்டுரைகள்
0
மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தேர்தல் பணிக்கான பொறுப்புகள் அரசு ஊழியர்களுக்கு கட்டாயமாக வழங்கப்படும் சூழலில், கேரளாவில் ஒரு இளம் ஆசிரியை தனது தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளித்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

AlsoRead

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள குழிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அந்த ஆசிரியை, வரும் மார்ச் 29ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார். திருமணத்திற்குப் பிறகு தனது கணவருடன் லடாக்கிற்கு தேனிலவு பயணம் மேற்கொள்ள அவர் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார். இதற்காக சுமார் ரூ.1.15 லட்சம் செலவில் விமான டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் வசதிகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், தேர்தல் காலம் நெருங்கியதால் அரசு ஊழியர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும் நிலையில், தன்னுக்கும் தேர்தல் பணி வழங்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த ஆசிரியை, தன்னுடைய சூழ்நிலையை விளக்கி மனு அளித்தார்.

அந்த மனுவுடன் திருமண அழைப்பிதழ், பயணத் திட்ட விவரங்கள், முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களையும் இணைத்திருந்தார். “சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் இந்த தேனிலவு பயணத்தை திட்டமிட்டுள்ளோம்; தயவுசெய்து இதைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெறுவது கடினமான ஒன்றாக இருந்தாலும், ஆசிரியையின் உண்மையான கோரிக்கையை கவனித்த ஆட்சியர், அதனை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

தேர்தல் நேரங்களில் விடுப்பு பெற பலர் பல்வேறு காரணங்களை முன்வைக்கும் சூழலில், தனது வாழ்க்கையின் முக்கிய தருணத்திற்காக நேர்மையாக கோரிக்கை வைத்த இந்த ஆசிரியை, சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறார்.

Tags: Election Duty Exemption IndiaErnakulam NewsGovernment Employee Leave RequestHoneymoon Leave StoryIndia Election Duty NewsKerala Teacher Honeymoon LeaveTeacher Viral StoryViral News Kerala
Previous Post

அதிமுகவில் இணைகிறாரா அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்?

Next Post

ஈரான் போரின் எதிரொலி: பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு!

Related Posts

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

31/07/2026
அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

30/07/2026

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

28/07/2026

கேரளாவுக்கு கருங்கல் ஜல்லி கொண்டு செல்லும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்:

28/07/2026

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்

27/07/2026

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

25/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை
  • குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்கு சிறப்பு கண்காணிப்பு குழு
  • திராவிட மாடல் திட்டங்களுக்கு ‘வெற்றி’ லேபிள் ஒட்டினால் போதுமா?
  • பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்
  • திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved