Friday, March 20, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

எம்.பி.க்களின் எண்ணிக்கை எவ்வளவு முக்கியம் தெரியுமா?

M.Pandiyaraj, Sub Editor by M.Pandiyaraj, Sub Editor
02/03/2025
in இந்தியா
0
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம் : நாளை பட்ஜெட் தாக்கல்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

1956-ல் நிர்வாக வசதிக்காக புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 522 ஆக உயர்ந்தது. பின்னர் 1973-ல் அது 543 ஆனது. அதற்குப் பிறகு கடந்த 50 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்குக் காரணம் தென் மாநிலங்களின் எதிர்ப்பு தான்.

AlsoRead

தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரிக்கை: ஆட்சியரிடம் மனு அளித்த கேரள ஆசிரியை

மேற்கு வங்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் – மம்தா பானர்ஜி அதிரடி!

டெல்லி சோகம்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் தொகைக் கட்டுப்பாடு திட்டங்களை தென் மாநிலங்கள் தீவிரமாக அமல் செய்தன. அதன் காரணமாக, மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்தது. நாம் இருவர் நமக்கு இருவர் என்பது மாறி பல வீடுகளில் நமக்கு ஒருவர் என்ற நிலைதான் உள்ளது. இதற்கு தென் மாநில மக்களின் படிப்பறிவும் ஒரு முக்கிய காரணம்.

மாறாக, வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்தது. அதைக் காரணம் காட்டி வட மாநிலங்களில் எம்.பி. சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தென் மாநிலங்களில் குறைக்கவும் மத்திய அரசு முயற்சிப்பதாக தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 888 எம்.பி.க்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தற்போதைய மக்கள் தொகையின்படி, எம்.பி.க்களின் எண்ணிக்கை 846 ஆக உயர வாய்ப்புள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி, உ.பி.யில் தற்போதுள்ள 80 எம்.பி. சீட்டுகள், 143 ஆக அதிகரிக்கும். பீகாரில் 40-ல் இருந்து 79 ஆக, ஏறக்குறைய 2 மடங்காக உயரும். ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இதற்குத்தான் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிப்பதுபோல், எம்.பி. தொகுதியின் பரப்பளவு அதிகமாக இருக்கும் போது, நிர்வாக வசதிக்காக அதை இரண்டாக பிரிக்கலாம். அதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களின் எம்.பி. சீட்டுகளை கூட்டவோ, குறைப்பதோ செய்தால், வட மாநிலங்களில் மட்டுமே வெற்றி பெரும் ஒரு தேசிய கட்சி, எளிதாக ஆட்சியைப் பிடித்துவிட முடியும். ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டும் ஆதரவான திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்த முடியும். ஆனால் எதிராக இருக்கும் தென் மாநிலங்களை புறக்கணிக்கும் போக்கு அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கெனவே வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற கோஷம் தமிழகத்தில் பிரபலம். அதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் வடக்கில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்து தெற்கில் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யாமல் விட்டாலும் அதுவும் தென் மாநிலங்களுக்கு செய்யும் துரோகமாகத்தான் இருக்கும். இதனால் தான் தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன. குறிப்பாக தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளதும் இதற்காகத்தான். பொதுவாக தமிழக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கையும் பா.ஜ.க.,விற்கு எதிரானது என்ற மனப்போக்கினை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழக அரசு எதற்கெடுத்தாலும் தங்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்ற பா.ஜ.க.,வின் புகார்… இது போன்ற உண்மையான, மிகவும் அக்கரையான விஷயங்களை கூட மூடிவிடக்கூடாது என தி.மு.க.,வினர் வலுவாக வாதிட்டு வருகின்றனர்.

Previous Post

போப்பிரன்சிஸ்-க்கு என்ன தான் பிரச்னை?

Next Post

அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளும் த.வெ.க, அ.ம.மு.க

Related Posts

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள்

தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரிக்கை: ஆட்சியரிடம் மனு அளித்த கேரள ஆசிரியை

20/03/2026
Mamata Banerjee

மேற்கு வங்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் – மம்தா பானர்ஜி அதிரடி!

20/03/2026

டெல்லி சோகம்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

18/03/2026

வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் – 12 மாற்று ஆவணங்கள் எவை?

18/03/2026

இந்தூரில் பயங்கரம்: EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்து தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு

18/03/2026

“அரசியலில் ஓய்வு என்பதே இல்லை” மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான பிரியாவிடை!

18/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரான் போரின் எதிரொலி: பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு!
  • தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரிக்கை: ஆட்சியரிடம் மனு அளித்த கேரள ஆசிரியை
  • அதிமுகவில் இணைகிறாரா அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்?
  • தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்து: விழுப்புரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் படுகாயம்!
  • உலகளாவிய சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் எச்சரிக்கை: ஈரானின் அதிரடி அறிவிப்பால் பதற்றம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved