Monday, May 12, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
11/05/2025
in இந்தியா
0
டெல்லியில் திமுக இன்று போராட்டம்: ராகுல்காந்தி பங்கேற்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவிப்பு வெளியிட்டது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுள்ளநிலையில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல்காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

AlsoRead

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக உச்ச கட்ட போர்பதற்றம் நிலவியது. கடந்த 4 நாட்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் சமாதான முயற்சியால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்றுமுன்தினம் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார். டிரம்ப் அறிவித்த பிறகே மத்திய அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது.

தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை டிரம்ப் முதலில் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் ஒருமனதான கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த கூட்டம் எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ளவும், நமது கூட்டுத் தீர்மானத்தை நிரூபிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும்.

பகல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதன்முதலில் அறிவித்த போர்நிறுத்தம் ஆகியவை குறித்து மக்களும்,அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags: Rahul Gandhi questionsUS President Trump
Previous Post

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

Next Post

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

Related Posts

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

11/05/2025
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

11/05/2025

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

11/05/2025

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

10/05/2025

இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த சீனா விருப்பம்

10/05/2025

‘ராணுவத்திற்கு உதவ தயார்’ : சண்டிகரில் குவிந்த இளம்பெண்கள், இளைஞர்கள்

10/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு
  • நம் எதிரிகள் கோழைகள்..! நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!
  • முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்
  • இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி
  • போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved