கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்புவிழாகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், மாணவர்களின் படிப்பிற்காகவும் வாழ்வின் உயர்வுக்காகவும் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வுத் துறையும், கல்வித் துறையும் முதலமைச்சரின் இரு கண்கள் என்று பல இடங்களில் பெருமிதத்துடன் அவர் பேசியதையும் நினைவு கூர்ந்தார்.
நிகழ்ச்சியில் 196-மாணவ மாணவிகள் பட்டம் பெற்று உறுதிமொழி ஏற்றனர். விழாவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன். மு. பெ. கிரி., வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குர் மலர், மாணவரணி அமைப்பாளர் விஜய் ஆனந்த், கல்லூரி பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



