அ.தி.மு.க எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக பாக முகவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கல்ந்தகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; எஸ்ஐஆர் காரணமாக மக்களின் வாக்குகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. வாக்குத் திருட்டுபற்றி ராகுல், கொள்ள வேண்டும். ஆமாயிருககிரன் உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விடுபடாமல் பார்த்துக் தமிழ்நாட்டை பொறுத்தவரை உண்மையான வாக்காளர்கள் விடுபட்டுவிடக் கூடாது.
இந்தியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் முதலமைச்சர் தள்ளப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் விவகாரத்தில் பாக முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும். எஸ்ஐஆர் பணிகளை நிறுத்திவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. உரிய கால அவகாசம் இல்லாமல் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எஸ்ஐஆர் படிவங்களை நிரப்புவதில் மக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது. கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதற்குள் தற்குள் தலையே சுற்றுகிறது.
மத்தியில் இருப்பவர்கள் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இப்படி ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கின்றனர். எஸ்ஐஆர் க்கு எதிராக மேற்குவங்கம், கேரள மாநில அரசுகளும் சட்டப்போராட்டம் நடத்துகின்றன.
வெற்றிக்காக மட்டும் அல்ல; மக்களின் வாக்குரிமையை காக்கும் கடமையும் உங்களுக்கு உள்ளது. எஸ்ஐஆர் படிவங்களை பொதுமக்கள் நிரப்புவதற்கு திமுக பாக முகவர்கள் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை, அவர்கள் உதிரிக் கட்சியாக கூட இருக்க முடியாது. அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார்கள்; எஸ்.ஐ.ஆரை ஆதரித்து அதிமுக வழக்கு தொடர்ந்தது வெட்கக்கேடானது என்றார்.



