Thursday, August 13, 2026
27 °c
Tiruvannamalai
30 ° Thu
31 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதல்வரின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

admin by admin
12/08/2026
in தமிழ்நாடு
0
தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதல்வரின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம், அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய், தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு என்று தெரிவித்தார். இதையடுத்து சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தொகுதி மறுவரையறையால் எந்த சூழலிலும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு என்றும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை திமுக முழுமையாக ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசுகையில், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படாத நிலையில், அரசியல் காரணங்களுக்காகவே அவசரமாக இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அதிமுக இந்த தீர்மானத்தை நிராகரிப்பதாக தெரிவித்தார்.

தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், ஒன்றிய அரசு இன்னும் சட்ட முன்வடிவை கொண்டு வராத நிலையில் எந்த அடிப்படையில் இந்த தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

பாமக சார்பில் கணேஷ்குமார், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளதாகவும், முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.

பாஜக சார்பில் போஜராஜன் பேசுகையில், தேவையான மாற்றங்களை காலத்திற்கேற்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அரசின் தனித் தீர்மானத்தை எதிர்த்து தொகுதி மறுவரையறையை கட்சிகள் ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

AlsoRead

தமிழை அவமதித்த அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்

கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு வீட்டிலிருந்தே இணையவழி நுழைவுச்சீட்டு பெறும் வசதி

தமிழகம் முழுவதும் ஜூலை 29 முதல் ஆக.11 வரை 1,577 ரவுடிகள் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னி அரசு பேசுகையில், தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாகவும், இந்த சூழலில் முதல்வர் கொண்டு வந்துள்ள தீர்மானம் அவசியமானது என்றும் கூறி ஆதரவு தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செல்லசாமி பேசுகையில், தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படக்கூடாது என்றும், அனைத்து மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி மட்டுமே முடிவு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அமைச்சர் ஷாஜகான் பேசுகையில், மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை கட்சி முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தார்.

விவாதத்திற்கு பின்னர் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிக, வாக்கெடுப்பின்போது தனது நிலைப்பாட்டை தெளிவாக பதிவு செய்யவில்லை.

Tags: சட்டப்பேரவைதனித் தீர்மானம்தொகுதி மறுவரைமுதல்வர் விஜய்
Previous Post

அரசு, கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்

Next Post

தொகுதி மறுவரையறைக்கு எதிரான அரசின் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு

Related Posts

தமிழை அவமதித்த அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்

தமிழை அவமதித்த அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்

12/08/2026
கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு வீட்டிலிருந்தே இணையவழி நுழைவுச்சீட்டு பெறும் வசதி

கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு வீட்டிலிருந்தே இணையவழி நுழைவுச்சீட்டு பெறும் வசதி

12/08/2026

தமிழகம் முழுவதும் ஜூலை 29 முதல் ஆக.11 வரை 1,577 ரவுடிகள் கைது

12/08/2026

“மொழி எனக்கு ஒரு பிரச்சினைதான்; தாய்மொழி தமிழ்தான்”

12/08/2026

தொகுதி மறுவரையறைக்கு எதிரான அரசின் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு

12/08/2026

அரசு, கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்

10/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழை அவமதித்த அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்
  • கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு வீட்டிலிருந்தே இணையவழி நுழைவுச்சீட்டு பெறும் வசதி
  • தமிழகம் முழுவதும் ஜூலை 29 முதல் ஆக.11 வரை 1,577 ரவுடிகள் கைது
  • “மொழி எனக்கு ஒரு பிரச்சினைதான்; தாய்மொழி தமிழ்தான்”
  • தொகுதி மறுவரையறைக்கு எதிரான அரசின் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved