“பருவமழை தொடங்குவதற்கு முன்பே போர்க்கால அடிப்படையில் ஏரி, குளங்களைத் தூர்வாருவதோடு, தண்ணீரைச் சேமிக்கும் வகையில் ஆங்காங்கே சிறு தடுப்பணைகளையும் கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் அவலநிலை தொடர்வது கவலையளிக்கிறது. ஏரி, குளங்கள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதே மக்கள் தாகத்தில் தவிக்க முக்கிய காரணமாகும்.
ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவுடன் மக்களை மறந்துவிட்ட முதல்வர் விஜய்யின் இந்த மெத்தனப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். இனியாவது விழித்துக்கொண்டு மக்களின் தாகம் தீர்க்க ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது, லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவது போன்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பருவமழை தொடங்குவதற்கு முன்பே போர்க்கால அடிப்படையில் ஏரி, குளங்களைத் தூர்வாருவதோடு, தண்ணீரைச் சேமிக்கும் வகையில் ஆங்காங்கே சிறு தடுப்பணைகளையும் கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



