Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மு.க.ஸ்டாலின் 2 வது முறையாக முதல்வராக பதவி ஏற்பது உறுதி: அமைச்சர் அர.சக்கரபாணி நம்பிக்கை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
23/02/2025
in தமிழ்நாடு
0
மு.க.ஸ்டாலின் 2 வது முறையாக முதல்வராக பதவி ஏற்பது உறுதி: அமைச்சர் அர.சக்கரபாணி நம்பிக்கை

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக முதல்வராக பதவி ஏற்பது உறுதி என்று ஒட்டன்சத்திரத்தில் நடந்த தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகர செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை ஏற்றுப் பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கூறியதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

தமிழகத்தில் 234 சட்ட மன்ற தொகுதிகளில் 5 இடங்களில் மட்டுமே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு அரசின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. அதில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது.

ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் ரூ.ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கிராமங்களுக்கும் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்த வரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 வது முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்பது உறுதி என்பதால் அதற்காக தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப்பணிகளின் சாதனைகளை மக்கள் முன் கொண்டு சென்று இப்போது இருந்தே தேர்தல் பணியை தீவிரமாக ஈடுபடவேண்டும்.

வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து ஊர்களிலும் திமுக கொடியேற்றி வைத்து, விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.

கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி  பார்வையாளர் பரணி கே.மணி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வரன், எஸ்.ஆர்.கே.பாலூ மற்றும் வார்டு செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள். இளைஞர்அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.

Tags: MKStalinTamil News TodayTamilnadu CM
Previous Post

ராணிப்பேட்டையில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்கள் கைது

Next Post

தனியார் மெடிக்கலில் ரூ.70, முதல்வர் மருந்தகத்தில் ரூ.11இதுதான் முதல்வர் மருந்தகத்தின் விலை வித்தியாசம்

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved