Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் பர்வதமலை 

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
16/04/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் பர்வதமலை 
0
SHARES
96
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டத்தில், அண்ணாமலையார் கோயிலுக்கு அடுத்தபடியாக பர்வதமலை பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் பார்க்கப்படுகிறது.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில், சுமார் 4 ஆயிரத்து 560 அடி உயர பர்வதமலை மீது, பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மலை உச்சியில் உள்ள இக்கோயிலை, 3ம் நூற்றாண்டில் நன்னன் எனும் குறுநில மன்னன் கட்டியதாகக் கூறப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பர்வதமலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகா, தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் மலையேறி, தங்கள் கைகளாலேயே தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களை சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

பர்வதமலை ஏறும் பக்தர்கள் பலர் மலையை முறையாகப் பராமரிக்காமல், குப்பைகளை ஆங்காங்கே வீசிச் செல்வதும், பிளாஸ்டிக் கழிவுகளை மலைமீது விட்டுச் செல்வதும் என பல குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், பர்வதமலைப் பகுதி தூய்மை இழந்து, சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிப்பதாக உள்ளது. இது சுற்றுச் ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் பர்வத மலைக்கு இரண்டு வழிகளிலும் பக்தர்கள் போர்வையில் ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர். அவர்களில் உண்மையிலேயே சிலர் பக்தர்களாகவும், பலர் பொழுதுபோக்காகவும் நுழைகின்றனர். பொழுதுபோக்காக நுழையும் இளைஞர்கள் போதை வஸ்துக்களை மறைத்து வைத்து எடுத்துச் செல்கின்றனர்.

வனத்துறையினர், சூழல் மேம்பாட்டுக் குழுவினருடன் இணைந்து பர்வத மலைக்கு வரும் பக்தர்களை சோதனை செய்துதான் அனுப்புகின்றனர்.ஆனால், சில இளைஞர்கள் போதை வஸ்துக்களை வைக்கக்கூடாத இடங்களில் மறைத்து வைத்து எடுத்துச் செல்கின்றனர். அதற்கான ஆதாரங்களையும் வனத்துறை காட்டுகின்றனர்.

என்னதான் வனத்துறை முயற்சிகள் எடுத்தாலும் கூட, எது நடந்தாலும் வனத்துறையினர் மீதே பழி வந்து சேர்வதாக வனத்துறையினர் புலம்புகின்றனர். வனத்துறையினர் மலைமீதுள்ள மரங்கள், அங்குள்ள விலங்குகள், பறவைகளையும் பாதுகாக்கவேண்டும். கூடவே பர்வதமலைக்கு வரும் பக்தர்களையும் பாதுகாக்கவேண்டும் என்றால் வனத்துறைக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.

எங்களுக்கு பக்கபலமாக காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை போன்ற துறைகளும் கைகொடுத்து நின்றால், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதுடன், அவர்களை பாதுகாக்கவும் முடியும். இப்பகுதியில் உள்ள மரங்கள், வன விலங்குகளை பாதுகாக்க முடியும். கூடவே வனத்தின் சுற்றுச் சூழலை மேம்படுத்தமுடியும் என்கின்றனர்.

அதனால், முதலில் மலைக்கு வரும் இளைஞர்களிடம் போதை வஸ்துக்களை தடை செய்வதற்கு காவல்துறை முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இளைஞர்களின் போதை பழக்கத்தால் பர்வதமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு அசம்பாவிதங்கள் நேர்ந்துவிடக்கூடாது. அதற்கு அறநிலையத்துறையின் பார்வை பர்வதமலை மீது முழுவதும் திரும்பினால், காவல்துறை மற்றும் வருவாய்துறைகளின் உதவியும் கிடைத்துவிடும்.

அதனால் பர்வதமலையை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: ParvathamalaiTamil News Todaytiruvannamalai
Previous Post

கல்வி நிறுவனங்களின் ஜாதிப்பெயர் நீக்க சென்னை உயர்நீதிமன்றம் காலக்கெடு

Next Post

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் நியமனம்

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved