Saturday, May 10, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

டிடிவி.தினகரனின் அதிரடி வேட்பாளர் அறிவிப்புக்குக் காரணம் என்ன?

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
07/05/2025
in தமிழ்நாடு
0
அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளும் த.வெ.க, அ.ம.மு.க
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

AlsoRead

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பேரணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

காஷ்மீரில் தமிழக மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்

துரைமுருகனின் இலாகா பறிக்கப்பட்டது ஏன்?

இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கொள்கையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. பேரூர் சிற்றூர் என கடைக்கோடி கிராமங்களில் கூட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே நான் தனி ஆள் அல்ல. எனக்குப் பின்னால் இலட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்.

எதிரணியை வீழ்த்துவதற்கு ஒருமித்த கொள்கை கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் அமமுக வேட்பாளராக களம் காண உள்ள மாவட்டச் செயலாளர் பார்த்திபனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதேபோல் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியில் தான் போட்டியிட தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்படி டிடிவி தினகரன் கூறியுள்ளார் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், ‘கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., சார்பில் கடுமையாக பண விநியோகம் நடந்தது. அப்படி இருந்தும்… தி.மு.க., 80 ஆயிரம் ஓட்டுகள் தான் வாங்கியது.

டிடிவி தினகரன், ஓட்டுக்கு பணம் தராமலேயே 58 ஆயிரம் ஒட்டுகள் வாங்கினார். இந்த முறை ஆளும் கட்சி உட்பட எந்த கட்சியாக இருந்தாலும், அவர்கள் வழியிலேயே நிச்சயம் தேர்தலை சந்திப்போம். இதனால் இங்கும் வெற்றி நிச்சயம் என கூறினர். இப்போது உள்ள சூழலில் டிடிவி தினகரன் இப்படி அதிரடி காட்ட என்ன காரணம் என பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

தன்னிச்சையாக அறிவிப்பு

பாஜக- அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக உள்ளது என்று சொல்லிவந்தார் டிடிவி.தினகரன். அப்படியிருக்கும் போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை என எதுவும் இல்லாமலேயே தன்னிச்சையாக சோளிங்கர் தொகுதியில் வேட்பாளரை டிடிவி.தினகரன் அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி தன்னிச்சையாக வேட்பாளர் அறிவிப்பை வெளியிடக் காரணம் என்ன?

அ.தி.மு.க.,- பா.ஜ.க., அணியில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தொடக்க நிலையிலேயே தினகரன் கட்சிக்கு பெரிய செல்வாக்கு எதுவும் இல்லை. அதனால் அவருக்கு மட்டும் ஒரு தொகுதியை ஒதுக்கலாம் என்று எடப்பாடி தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இதனால் கோபமான டிடிவி.தினகரன், அதிரடியாக வேட்பாளரை அறிவித்துள்ளார். இங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் பார்த்திபன், 2016 ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இதனால் இந்த அறிவிப்பு மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது. இதன் உடனடி விளைவாக டிடிவி.தினகரனிடம் சமரசப் பேச்சுகள் தொடங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சிக்கலை நீடிக்க விடக்கூடாது என பா.ஜ.க., தீவிரமான பேச்சு வார்த்தைகளில் களம் இறங்கி உள்ளது.

-மா.பாண்டியராஜ்

Tags: AMMK Partytamilnadu politicsTTV.Dhinakaran
Previous Post

பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை

Next Post

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்

Related Posts

திராவிட நல் திருநாடு என்று சொன்னால் நாக்கு தீட்டாகிவிடுமா? எரியும் என்றால் திரும்பத் திரும்ப பாடுவோம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பேரணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

09/05/2025
ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

காஷ்மீரில் தமிழக மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்

09/05/2025

துரைமுருகனின் இலாகா பறிக்கப்பட்டது ஏன்?

09/05/2025

விஜய்க்கும்… பவன்கல்யாணுக்கும் என்ன தெரியும்? நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் பாய்ச்சல்..!

08/05/2025

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் : பிரதமருக்கு வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி

07/05/2025

‘ஆபரேஷன் சிந்தூர்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு

07/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “மோடி பெயரை உச்சரிக்கக்கூட தைரியமில்லாத பிரதமர்” நாடாளுமன்றத்தில் ஆவேசமடைந்த பாக்., எம்.பி.,
  • அவசர கால முன்னெச்சரிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
  • இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பேரணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 
  • காஷ்மீரில் தமிழக மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்
  • துரைமுருகனின் இலாகா பறிக்கப்பட்டது ஏன்?

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved