Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: போக்சோவில் இளைஞர் கைது

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
13/02/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: போக்சோவில் இளைஞர் கைது
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

செஞ்சி அருகே காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசபெருமாள்-நீலா  தம்பதிகளுக்கு இரண்டு மகள் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இதில் மூத்த மகள் தியா(18) தொலைதூரக் கல்வியும், மகன் தீபக்(15) பத்தாம் வகுப்பும் மற்றும் இளைய மகள் பிரியங்கா(13) செஞ்சி காந்திபஜார் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு  உடல் நலக்குறைவால் வெங்கடேசபெருமாள் உயிரிழந்த நிலையில், நீலா கூலி வேலைக்கு சென்று தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதி சேர்ந்த தேனன் என்பவரின் மகன் சரவணன்(25) என்பவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பிரியங்கா பள்ளிக்கு செல்லும்போது அவரை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தியதாகவும், இதனால் பயந்த பிரியங்கா தன் தாய் நீலாவிடம் கூறி அழுதுள்ளார்.

இதனை அடுத்து நீலா சரவணன் தந்தையான தேனன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.

அப்போது சரவணன் குடும்பத்தினர் என் மகனால் உங்கள் மகளுக்கு எவ்வித தொல்லையும் வராது என வாய்மொழியாக உறுதி அளித்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு பிரியங்கா மற்றும் அவரது அண்ணன் தீபக் ஆகியோர் சென்றுள்ளனர்.

அப்போது பிரியங்காவை வழிமறித்த சரவணன் தன்னை காதலிக்க மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மீண்டும் தாயிடம் தெரிவித்தநிலையில், காலையில் பேசிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரியங்கா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தாய் நீலா செஞ்சி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் செஞ்சி த.வெ.க பொருளாளர் சரவணன் மற்றும் குண.சரவணன் மனைவிமான சங்கீதா ஆகியோர் மீது போக்சோ, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள  சங்கீதாவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags: Crime News TodayGingee News TodayVillupuram District News
Previous Post

புகாரளித்த பெண்ணிடம் போலீஸ் எஸ்ஐ ஆபாசப் பேச்சு:ஆடியோ  வெளியாகி பரபரப்பு

Next Post

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும் நடவடிக்கை : அமைச்சர் எச்சரிக்கை

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved