திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் சுமார் 4560அடி உயரமுள்ள பருவதமலை உள்ளது. இந்தமலை உச்சியில் பழமை வாய்ந்த மல்லி கார்ஜுனேஸ்வர் கோயில் உள்ளது இங்குமாதம்தோறும் பௌர்ணமி மற்றும் அமாவாசைகளில் பக்தர்கள் மலைஏறி வருவது வழக்கம்.
இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் விபத்துகளை தடுக்கவும் மலையேறும் பக்தர்கள் நலன் கருதியும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளையும் வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பருவதமலை ஏறுவதற்கு தினசரி காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை,18 வயது முதல் 60 வயது வரை உன்னவர்கள் மட்டும் ஒருமணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
கர்ப்பிணிகன் நடக்க இயலாத நிலையில் உள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்குப் கண்டிப்பாக அனுமதி இல்லை நுரையிரல் பாதிப்பு உள்ளவர்கள். சுவாச பிரச்சனை உள்ளவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மலை ஏற முயல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது பர்வத மலையினை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த 200 பக்தர்கள். இதர பக்தர்கள் 800 பேர் என ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர் மலையேறும் பக்தர்கள் இணைய வழியில் விண்ணப்பித்து பதிவு அனுமதி பெற வேண்டும்.
குடிநீர், கழிவறை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலையத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இணைந்து செய்து தரும் மலை அடிவாரம் மற்றும் மலை ஏறும் வழி, கடப்பாறைப்படி மற்றும் மலைக்கோவில் உச்சிபோன்ற இடங்களில் பாதுகாப்பு பணிக்கு வனத்துறை, காவல் துறை மருத்துவத்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகள் இணைந்து சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். இவ்வாறு கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதலை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.



