விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் மழவந்தாங்கல் கஸ்துரி பாகாந்தி நர்சிங் கல்லூரி, ஆலம்பூண்டி ரங்கபூபதி நர்சிங் கல்லூரி, அவலூர்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செஞ்சி ஐடிஐ, ஓம்சக்தி ஐடிஐ, ஓ.பி.ஆர்.நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அன்னமங்கலம்சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம் சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிசெஞ்சிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றியத்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு 698 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் மடிக்கணினி வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரபாண்டியன்,ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், நிர்வாகிகள் அய்யாதுரை, பிரசன்னா தொண்டரணி பாஷா, கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல் அலுவலர் பாலமுருகன் நன்றி கூறினார்.



