Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கல்வராயன்மலை வாழ் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
30/01/2025
in மாவட்டங்கள்
0
கல்வராயன்மலை வாழ் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கல்வராயன்மலை வாழ் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

AlsoRead

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகில் கூட்டுறவுத் துறையின் சார்பில் பெரும்பலநோக்கு கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வனப் பொருட்கள் விற்பனை மையம் அமைத்தல் மற்றும் நகர் கூட்டுறவு கடன் சங்கக் கட்டிடத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கல்வராயன்மலை வாழ் மக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்ய கூட்டுறவுத் துறையின் சார்பில் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி, கூட்டுறவுத் துறையின் பெரும்பலநோக்கு கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் மலைவாழ் பொருட்களான உடலுக்கு நன்மைதரக் கூடிய சாமை, வரகு, தினை, தேன், மிளகு, புளி போன்ற பல்வேறு விளை பொருட்கள் மலைவாழ் விவசாயிகளிடம் பெறப்பட்டு கள்ளக்குறிச்சி, சேராப்பட்டு, மூரார்பாது ஆகிய இடங்களில் கூட்டுறவுத் துறையின் சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக உளுந்தூர்பேட்டை வட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகில்கூட்டுறவுத் துறையின் சார்பில் பெரும்பலநோக்கு கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வனப் பொருட்கள் விற்பனை மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இதேபோன்று நகர் கூட்டுறவு கடன் சங்கக் கட்டிடத்திற்கான இடமும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், செங்குறிச்சி பகுதியில் வனப்பொருட்கள் விற்பனை மையம் அமைப்பதன் மூலம் மலைவாழ் விவசாயிகள் உற்பத்திப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்ய வழிவகை ஏற்படும்.

எனவே, விற்பனை மையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் குறிஞ்சிமணவாளன், உளுந்தூர்பேட்டை நகர்மன்ற தலைவர் வைத்தியநாதன், நகர்மன்ற துணைத்தலைவர் திருநாவுக்கரசு, வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags: FarmersKallakurichi NewsKalvarayan Hills
Previous Post

கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு: விசாரணைக் குழு அமைப்பு

Next Post

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில்மக்கள் குறைதீர்வு கூட்டம்

Related Posts

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

22/04/2025
கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

22/04/2025

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

22/04/2025

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

22/04/2025

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

22/04/2025

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்பு

22/04/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved