Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளமின்றி கிராம மக்கள் அவதி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
04/02/2025
in மாவட்டங்கள்
0
100 நாள் வேலை திட்டத்தில் சம்பளமின்றி கிராம மக்கள் அவதி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3 மாதங்களாக சம்பளம் வழங்காததால் கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியாவில் வறட்சி காலங்களில், கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு கருதி, குளம், வரத்து வாய்க்கால் தூர்வாருதல். மண் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, காங்., ஆட்சி காலத்தில் 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. 

AlsoRead

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

காலம் செல்லச் செல்ல, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் எந்த பணிகளும் முறையாக நடைபெறவில்லை என்றும், தொழிலாளர்கள் பெயரளவில் மட்டுமே வேலை பார்ப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளன.

இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.319 சம்பளம் வழங்கி வருவதால், ஊராட்சி வாரியாக ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த தீபாவளியை முன்னிட்டு, இவர்களுக்கு அக்டோபரில் சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது, மூன்று மாதங்களைக் கடந்த நிலையில், இன்னும் 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இந்த வேலையை மட்டுமே நம்பியுள்ள குடும்பங்கள், மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. தங்களது உணவு தேவைக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட மக்களின் நலன் கருதி, 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

இதுகுறித்து பா.ம.க. வேடசந்தூர் தொகுதி செயலாளர் கணேசன் கூறியதாவது: 

கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் இந்த 100 நாள் வேலை திட்டத்தில், 90 சதவீத மக்கள் ஏழை எளிய மக்கள் தான் செல்கின்றனர். மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு மிகுந்த அவதிப்படுகின்றனர். வாரச்சந்தைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. 

இதனால் தொழிலாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர். ஊராட்சி தலைவர்கள் இல்லாததால், சம்பளம் வருமா, வராதா என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  

எனவே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் நலம் கருதி, அவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, மத்திய மாநில அரசுகள் முறையாக விரைந்து வழங்க வேண்டும் என்றார்.

Tags: 100day workDindigul NewsTamil News Today
Previous Post

புழலில் ரூ. 11.90 கோடியில் அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டு திடல்- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

Next Post

மணல் கொள்ளை ஜோர் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

Related Posts

திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026
Ayya Vaikundar Avathar Day

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

21/02/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved