Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
22/04/2025
in மாவட்டங்கள்
0
வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வேடசந்தூர் அருகே மது குடிப்பதற்காக முகமூடி அணிந்து வந்து, தாத்தா பாட்டியை கட்டையால் தாக்கி கத்தியால் குத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்ற பேரன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

AlsoRead

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு மாரம்பாடியில் தோட்டத்து வீட்டில் வசித்து வரும் வேளாங்கண்ணி ஆரோக்கியம் (வயது 75), கேத்தரின்மேரி (வயது 68). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவரும் திருமணமாகி தனித்தனியாக அருகே உள்ள சாமிமுத்தன்பட்டியில் வசித்து வருகின்றனர்.

தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் தென்னை மற்றும் சப்போட்டா மரங்களை வைத்து பராமரித்துக்கொண்டு தோட்டத்திலேயே வயதான தம்பதிகள் தங்கி உள்ளனர்.

கடந்த 19-ம் தேதி இரவு 8 மணிக்கு முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் இருவரையும் கட்டையால் தாக்கிவிட்டு, கையில் வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றபோது வேளாங்கண்ணி ஆரோக்கியத்திற்கு பின்கழுத்திலும், அவரது மனைவி கேத்தரின்மேரிக்கு கையிலும் கத்திக்குத்து விழுந்தது. இருவரும் அதிர்ச்சியில் இருந்து சுதாரிப்பதற்கு முன்பு கேத்தரின்மேரியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை இரு மர்ம ஆசாமிகள் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

காயமடைந்த முதிய தம்பதிகள் வேளாங்கண்ணி ஆரோக்கியம், கேத்தரின்மேரி ஆகியோரை அக்கம் பக்கம் இருந்த உறவினர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து எரியோடு போலீசில் வேளாங்கண்ணி ஆரோக்கியம் கொடுத்த புகாரின் பேரில் எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கிழக்கு மாரம்பாடி பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 32) என்பவரைப் பிடித்து எரியோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தபோது, “தனது நண்பர் பிரபுவுடன் சேர்ந்து மது குடிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி, தாத்தா பாட்டி உறவு முறையில் உறவினர்களான வேளாங்கண்ணி ஆரோக்கியம், கேத்தரின்மேரி ஆகியோரை கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்தோம்” என்று ஒப்புக்கொண்டார். பிரபுவுக்கு கிடைப்பதில் சரிபாதியாகப் பங்கு தருவதாகவும் கூறியதாகத் தெரிகிறது.

எரியோடு போலீசார் அருண்குமார், பிரபு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்ட அருண்குமார் மீது எரியோடு போலீஸ் நிலையத்தில் அடிதடி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Crime NewsDindigul Newsgrandson arrestedJewelry theft
Previous Post

புதிய உச்சத்தில் தங்கம் விலை : சவரன் ரூ.74 ஆயிரத்தை கடந்தது

Next Post

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

Related Posts

Kalasapakkam Election Training

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026
Sivakasi Fireworks Accident

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

23/03/2026

8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு; திண்டுக்கல் அருகே சோக சம்பவம் – பள்ளிக்கு வராதது பின்னணி?

23/03/2026

திண்டுக்கல்: பைக்கில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.84,500 பறிமுதல்

23/03/2026

நிலக்கோட்டை அருகே வாகன சோதனையில் ரூ.4.68 லட்சம் பறிமுதல்

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved