Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பழுதடைந்த பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க ஆட்சியர் உத்தரவு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
08/01/2025
in மாவட்டங்கள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஒன்றியம், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 829 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்கள் பயின்று வந்த 2 கட்டிடங்களின் மேற்கூரை பழுதடைந்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையிலும், போதிய இட வசதி வழங்கும் வகையிலும் பழுதடைந்த கட்டிடத்தின் மேற்கூரையினை சீரமைக்க நேற்று இரவு பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாக கோரிக்கை வைத்தார்.

AlsoRead

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

தலைமையாசிரியரின் கோரிக்கையினை ஏற்று நேற்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுடன் பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பழுதடைந்துள்ள 4 வகுப்பறைகள் கொண்ட 2 கட்டிடங்களின் மேற்கூரையினை ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் உடனடியாக சீரமைத்து மீண்டும் கட்டிடத்தினை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்க உத்தரவிட்டு, உரிய திட்ட மதிப்பீட்டினை தயார் செய்து பணியினை உடனடியாக தொடங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதேபோன்று பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தலைமையாசிரியரின் கோரிக்கையினை ஏற்றும் மாணவர்களுக்கான புதிய கழிவறையினை பள்ளியில் கூடுதலாக அமைத்துத் தரவும், அதற்கான திட்ட மதிப்பீட்டினையும் தயார் செய்து பணியினை உடனடியாக தொடங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்களை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்து, தமிழக அரசின் கற்றல் உபகரணங்களை உரிய முறையில் பயன்படுத்தி சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசின் உத்தரவின்படி

மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்தார்.

Tags: Kallakurichi Newsகள்ளக்குறிச்சி செய்திகள்பள்ளிக் கட்டிடம் சீரமைப்பு
Previous Post

செங்கம் அருகே 100 கே வி திறன் கொண்ட புதிய மின் மாற்றி இயக்கம்

Next Post

செஞ்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Related Posts

Kalasapakkam Election Training

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026
Sivakasi Fireworks Accident

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

23/03/2026

8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு; திண்டுக்கல் அருகே சோக சம்பவம் – பள்ளிக்கு வராதது பின்னணி?

23/03/2026

திண்டுக்கல்: பைக்கில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.84,500 பறிமுதல்

23/03/2026

நிலக்கோட்டை அருகே வாகன சோதனையில் ரூ.4.68 லட்சம் பறிமுதல்

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved