Friday, July 31, 2026
28 °c
Tiruvannamalai
32 ° Sat
31 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“நாட்டில் எல்பிஜி தட்டுப்பாடு இல்லை; போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது” – மத்திய அரசு விளக்கம்

Balaji by Balaji
16/03/2026
in இந்தியா
0
India LPG supply

India LPG supply

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நாட்டில் எல்பிஜி (LPG) விநியோக நிலவரம் குறித்து எழுந்துள்ள கவலைகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா முழுவதும் எல்பிஜி விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்றும், நாட்டில் போதுமான அளவில் கச்சா எண்ணெய் கையிருப்பு இருப்பதாகவும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் உள்ள அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் அதிக திறனுடன் செயல்பட்டு வருவதாக கூறினார். மேலும், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல இயங்கி வருவதாகவும், எங்கும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டு நுகர்வோரின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, தடையற்ற எல்பிஜி விநியோகத்தை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கொடியுடன் பயணம் செய்த எல்பிஜி கேரியர் ‘ஷிவாலிக்’ விரைவில் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை அடையும் என கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ராஜேஷ் குமார் சின்ஹா கூறுகையில், பாரசீக வளைகுடாவிலிருந்து புறப்பட்டு ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த ‘ஷிவாலிக்’ எல்பிஜி கப்பல் இன்று மாலை சுமார் 5 மணியளவில் முந்த்ரா துறைமுகத்தை அடையும் என்று தெரிவித்தார். கப்பல் வருகைக்கு முன்பே தேவையான ஆவணங்கள், முன்னுரிமை நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் துறைமுகத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சரக்குகளை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

மேலும், பாரசீக வளைகுடா பகுதியில் பணியாற்றி வரும் அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் எந்தவித சம்பவமும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.

AlsoRead

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

கேரளாவுக்கு கருங்கல் ஜல்லி கொண்டு செல்லும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்:

சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவலின்படி, 611 இந்திய மாலுமிகளுடன் 22 இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் உள்ள பாரசீக வளைகுடா கடற்பரப்பில் இருப்பதாகவும், நிலைமையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், மார்ச் 14 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சுமார் 81,000 டன் முர்பன் கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட ‘ஜக் லாட்கி’ என்ற இந்தியக் கப்பல் பாதுகாப்பாக இந்தியாவை நோக்கி பயணம் செய்து வருவதாகவும், அது நாளை முந்த்ரா துறைமுகத்தை அடையும் என்றும் ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Tags: crude oil stock IndiaHormuz Strait shippingIndia LPG supplyIndian oil supply newsLPG shortage IndiaMundra port LPG carrierpetroleum ministry India
Previous Post

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

Next Post

ஆஸ்கர் 2026: மகுடம் சூடிய ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ – சிறந்த நடிகர் மைகேல் பி. ஜோர்டன்! முழு வெற்றியாளர் பட்டியல்

Related Posts

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

30/07/2026
மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

28/07/2026

கேரளாவுக்கு கருங்கல் ஜல்லி கொண்டு செல்லும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்:

28/07/2026

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்

27/07/2026

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

25/07/2026

பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

25/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்வு
  • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜிங்க்ய ரஹானே ஓய்வு அறிவிப்பு
  • அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு
  • மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு
  • டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved