திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிடவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணமங்கலம் களம்பூர் சந்தவாசல் ஆகிய கியபகுதி பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி, காட்டன் 3 நெம்பர் ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்குரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் ஆரணி, களம்பூர், கண்ணமங்கலம், சந்தவாசல், படவேடு ஆகிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது ஆரணி டவுன் பெரியக்கடை வீதியை சேர்ந்த கௌதம் என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை 3 செய்ததையடுத்து கௌதமை கைது செய்தனர்.
அதே போல கண்ணமங்கலம் உசேன் தெருவை சேர்ந்த விஜயகுமார். லலிதா ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் பெண் உட்பட 3 பேரையும் ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.



