Tuesday, June 17, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சிறுதானிய உணவு திருவிழா – 2023

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
26/12/2023
in செய்திகள், மாவட்டங்கள்
0
சிறுதானிய உணவு திருவிழா – 2023
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை நகராட்சி, காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் சிறுதானிய உணவு திருவிழா – 2023 நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி விழாவை துவக்கி வைத்தார்.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

திருவண்ணாமலை நகராட்சியில் இன்று உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையுடன் Rotary Vegan சங்கம், பசுமை விகடன் மற்றும் காலீஸ்வரி ஆயில் மில் ஆகியோர் இணைந்து சிறுதானிய திருவிழாவை இரண்டு நாட்கள் நடத்துகின்றனர். திருவண்ணாமலை காந்தி நகர் மைதானம் (அமோகா ஹோட்டல் எதிரில்) நடைபெற்றது. இந்நிகழ்வில் இரண்டு உலக சாதனைகளை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 100 எண்ணிக்கையிலான சிறுதானிய மற்றும் இயற்கை முறையில் உணவு தயாரிக்கும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி பேசியதாவது:

சிறுதானிய நூற்றாண்டு விழாவானது மக்களிடையே சிறு தானியத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெற்று வருகிறது. அனைவரும் தங்கள் அன்றாட வாழ்வில் சிறுதானியத்தை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து வேளாண்மை துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் கா்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் பலவேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு சிறப்பாக செயலாற்றி வருகிறது.

பள்ளி மாணவர்கள் அனைவரும் தங்களது சிறு வயது முதலே சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு தயாரிப்பாளர்கள் சிறுதானியத்தை வைத்து காலத்திற்கு ஏற்றாற்போல் சுவை மிகுந்த உணவுகளை தயாரிக்க வேண்டும். சிறுதானியங்களில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் இப்பொழுது முதலே சிறுதானிய உணவுகளை உண்டு, எதிர்காலத்தின் ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை துணைதலைவர் கு.பிச்சாண்டி கூறினார்.

கிரிவலப் பாதையில் 2,461 அன்னதான கூடம் அமைத்து முறையான பயிற்சி அளித்து சான்று வழங்கி 23 இலட்சத்து 95 ஆயிரம் நபர்களுக்கு முறையாக அன்னதானம் வழங்கி சாதனை செய்தற்காகவும், 78 அன்னதான கூடம் சிறுதானிய உணவு வழங்குவதற்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு இலட்சத்து 30 ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கி உலக சாதனை செய்ததற்க்காகவும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் 25 நிமிடத்தில் 347 சிறுதானிய உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

15 அடி உயரத்தில் இந்திய வரைப்படம் உருவாக்கி அந்தந்த மாநிலத்தில் உற்பத்தியாகும் சிறுதானிய பொருட்களை கொண்டு இந்திய வரைப்படம் உருவாக்கியதற்காகவும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைதலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

இந்நிகழ்வில், சிவராமன், சிறுதானியத்தின் சிறப்பு பற்றியும், சுல்தான் அகமத் இஸ்மாயில், மண் நலம் மனித நலம் பற்றியும், சாய்பிரசன்னா, சிறுதானியம் இயற்கை விவசாயம் பற்றியும், தில்லைவாணன், சரக்கரை நோயை வெல்லும் பாரம்பரிய உணவுகள் பற்றியும், ப்ரியா நாராயணன் மரபு விதை சேமிப்பாளர், மரபு விதைகளின் மறுபயணம் விதை முதல் விதை வரை பற்றி நிர்மலாகுமாரி பேசினார்.

சிறுதானியத்தின் எதிர்கால முக்கியத்துவம் பற்றியும், மண்வாசனை மேனகா, நேரலை சிறுதானிய சமையல் செய்முறை விளக்கம் மற்றும் சிறுதானியத்தின் பயன்கள் பற்றியும், கோ.சித்தர் இயற்கை உணவின் மருத்துவ குணங்கள் பற்றியும், திருமாறன் செடிகளை காசாக்கும் கலை பற்றியும். சத்யராமன், உலகளவில் சிறுதானியத்தின் முக்கியத்துவம் பற்றியும், அறிவுடை நம்பி, சிறுதானியங்களின் சில சிந்தனைகள் பற்றியும், செல்வம், பூச்சிகளை புரிந்து கொள்வோம். நஞ்சில்லா உணவுக்கான நல்வழி பற்றியும் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.

மதுரை முத்து சிறப்பு பட்டிமன்றமும் லயோலா கல்லூரி மாணவர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. உணவு திருவிழாவில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை அனுமதி இலவசம்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாநில தடகள் சங்க துணைதலைவர் எ.வ.வே.கம்பன், நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத் துறை இராமகிருஷ்ணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், மீனாம்பிகை. வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அரக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Tags: கு.பிச்சாண்டி விழாவை துவக்கி வைத்தார்.குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவுசிறுதானிய உணவு திருவிழாதிருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்
Previous Post

நல்லக்கண்ணு பிறந்த தினம் (1925)

Next Post

பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் கைது

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved