விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் தையூர்ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வல்லம் ஒன்றியத்தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் அன்புராஜ்,வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் திருமுருகன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில்முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு உங்களுடன் ஸ்டாலின்திட்ட முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்களைப் பெற்று கணினி மூலம் பதிவு செய்வதற்கும், முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். முகாமில் மேல்சித்தமூர் வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவமனை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், ரத்தஅழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்களை தேடிமருத்துவத்துவதிட்டத்தின் கீழ் மருந்து மாத்திரை அடங்கிய பெட்டகத்தையும் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் ஒரு கோடியே 15 லட்சம் இல்ல கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது விடுபட்டுள்ள தகுதி வாய்ந்த அனைத்து மகளிர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை முதலமைச்சர் விரைவில் வழங்குவார். இவ்வாறு செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்டாக்டர் மாசிலாமணி, மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, ஒன்றிய செயலாளர்களமொடையூர் துரை, இளம்வழுதி,ஊராட்சி மன்ற தலைவர்கள் சரஸ்வதிசெல்வராஜ், மழை மேனிபாண்டியன், அசோக்குமார், காமாட்சி சத்தியமூர்த்தி,நிர்வாகிகள் பாண்டியராஜன், கண்ணன்,லட்சுமணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் தமிழரசன்,கிருஷ்ணமூர்த்தி, கார்வண்ணன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்பு செல்வன் நன்றி கூறினார்.



