Friday, March 20, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

துபாயில் தாக்குதல் அச்சம்: சென்னை-துபாய் 3 விமான சேவைகள் பாதிப்பு – 700க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

Balaji by Balaji
17/03/2026
in உலகம்
0
Emirates flight diversion

Emirates flight diversion

0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

துபாயில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக வந்த தகவலின் காரணமாக, சென்னை இருந்து துபாய் செல்ல வேண்டிய 3 விமானங்களின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. இதனால், 700-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

AlsoRead

ஈரான் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் – உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிப்பு?

விண்வெளி மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி? அமெரிக்க அரசின் ‘Aliens’ இணையதளம்: ஒரு விரிவான பார்வை!

வட கொரியாவின் ‘மர்மத் தேர்தல்’: கிம் ஜோங் உன்னின் பிடியில் புதிய அதிகார மையங்கள்!

துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 242 பயணிகளுடன் நேற்று அதிகாலை 2.15 மணிக்கு சென்னை வந்தது. பின்னர், அதே விமானம் அதிகாலை 4 மணிக்கு 206 பயணிகளுடன் துபாய் நோக்கி புறப்பட்டது. விமானம் குஜராத் கடல் எல்லைப் பகுதியில் சுமார் 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, துபாய் விமான நிலையம் அருகே மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடப்பதாகவும், வான்வழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் விமானிக்கு அவசர தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விமானி சென்னை மற்றும் துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளுடன் தொடர்பு கொண்டு, விமானத்தை மீண்டும் சென்னை திருப்பி தரையிறக்கினார். காலை 8.20 மணியளவில் அந்த விமானம் பாதுகாப்பாக சென்னை வந்தது.

பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், காலை 9.50 மணிக்கு 258 பயணிகளுடன் புறப்பட இருந்த எமிரேட்ஸ் விமானமும், காலை 10.30 மணிக்கு 186 பயணிகளுடன் செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானமும் ரத்து செய்யப்பட்டன.

இதன் விளைவாக, துபாய் செல்ல இருந்த 700-க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். துபாயில் நிலைமை சீராகி, வான்வழி மீண்டும் திறக்கப்பட்டதும் விமான சேவைகள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Tags: Air India Express Dubai delaybreaking aviation news IndiaChennai airport passengers strandedChennai to Dubai flightsDubai airspace closureDubai missile attack newsEmirates flight diversionflight disruption India Dubai
Previous Post

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு – தலிபான் அரசு குற்றச்சாட்டு

Next Post

தேர்தல் பறக்கும் படை சோதனை: சென்னை 3 இடங்களில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரான் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் – உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிப்பு?

20/03/2026
விண்வெளி மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி? அமெரிக்க அரசின் ‘Aliens’ இணையதளம்: ஒரு விரிவான பார்வை!

விண்வெளி மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி? அமெரிக்க அரசின் ‘Aliens’ இணையதளம்: ஒரு விரிவான பார்வை!

19/03/2026

வட கொரியாவின் ‘மர்மத் தேர்தல்’: கிம் ஜோங் உன்னின் பிடியில் புதிய அதிகார மையங்கள்!

19/03/2026

இஸ்ரேல் மீது ஈரான் கொத்து குண்டு வீச்சு: அணுசக்தி நிலையங்கள் அருகே ஏவுகணை தாக்குதலால் உச்சகட்ட பதற்றம்!

18/03/2026

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஈரானின் முக்கியத் தலைவர் அலி லரிஜானி உயிரிழப்பு!

18/03/2026

“ஈரான் போர் ஒரு பொய்!” – டிரம்ப் நிர்வாகத்தை உலுக்கும் உளவுத்துறை உயரதிகாரியின் ராஜினாமா

17/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ரம்ஜான் பண்டிகை: திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம் – துரைமுருகன் அறிவிப்பு
  • கோவையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: முடங்கும் வீதியோர உணவகங்கள் – தொழிலாளர்கள் வேதனை!
  • சேலம்: கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற அரசுப் பேருந்து – விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
  • திமுக கூட்டணியில் இருந்து விலகியது த.வா.க; வேல்முருகனின் அதிரடி முடிவு!
  • சிபிஐ வளையத்தில் விஜய்; கரூர் வீடியோ ஆதாரங்களை அழிக்க முயற்சி? – கைது செய்ய வாய்ப்புள்ளதா?

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved