திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், குபேர லிங்கம் தாண்டிய பிறகு வலது பக்கத்தில் அமைந்துள்ளது, இடுக்குப் பிள்ளையார் கோவில். இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் உள்ளே நுழைந்து வெளியே வந்து தரிசனம் செய்து சென்றார்கள்.
இடுக்கு பிள்ளையார் என்று இதற்கு பெயர் வந்ததற்கு இந்த கோவிலின் அமைப்பு காரணமாகும். இந்த இடுக்குப் பிள்ளையாரை தரிசிக்கும் பெண்களுக்கு கருப்பை சார்ந்த பிரச்சனைகள், நரம்புக் கோளாறுகள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு நிவாரணம் தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.



