Tuesday, June 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.20% தேர்ச்சி

மாணவிகள் மீண்டும் சாதனை; ஈரோடு முதலிடம்

admin by admin
08/05/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.20% தேர்ச்சி
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை 8.27 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

தேர்வுத்தாள்கள் 150-க்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த ஏப்ரல் 6 முதல் 20-ம் தேதி வரை மதிப்பீடு செய்யப்பட்டன.

இன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்படி, மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.20 சதவீத தேர்ச்சி விகிதமாகும்.

இதில் 4,06,167 மாணவிகள் 97 சதவீத தேர்ச்சியுடன் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3,47,527 பேர் தேர்ச்சி பெற்று 93.19 சதவீத தேர்ச்சி விகிதம் பதிவு செய்துள்ளனர். மாணவர்களை விட 3.81 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்று மீண்டும் சாதனை படைத்துள்ளனர்.

இந்தாண்டு தேர்வில் பங்கேற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,536 ஆகும். இதில் 2,639 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அவற்றில் 489 அரசு பள்ளிகளும் அடங்கும்.

மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 98.87 சதவீதத்துடன் முதலிடம் பெற்றுள்ளது. தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் 98.05 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம் 97.63 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

அடுத்து நெல்லை மாவட்டம் 97.54 சதவீதமும், திருச்சி மாவட்டம் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.

மேலும், பள்ளி மாணவர்கள் உறுதிமொழிப் படிவத்தில் வழங்கிய செல்போன் எண்ணுக்கும், தனித் தேர்வர்கள் விண்ணப்பத்தின் போது பதிவு செய்த எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலம் வாட்ஸ்அப் சேவையிலும் தேர்வு முடிவுகளை அறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 78452 52525 என்ற எண்ணுக்கு ‘Hi’ என வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, தேவையான விவரங்களை பதிவு செய்து தேர்வு முடிவுகளை பெறலாம்.

இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Tags: தமிழ் நாடுபிளஸ்-2 தேர்ச்சிமாணவிகள் சாதனை
Previous Post

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Next Post

பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் அவசியம் ஆளுநர் மீண்டும் உறுதி;

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு
  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved