Tuesday, May 5, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
23/12/2023
in மாவட்டங்கள்
0
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நீர் இருப்பு 117.95 அடியாக உள்ளது
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 62 கன அடியாக குறைந்திருக்கிறது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் நீர்வரத்து குறைந்துள்ளது.

சாத்தனூர் அணையின் பாசனத்தை நம்பி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது. 3 மாவட்டங்களிலும் 88 ஏரிகள் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டங்களும் சாத்தனூர் அணையை நம்பியே உள்ளன.

இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால், சாத்தனூர் அணை முழு கொள்ளளவை நெருங்கியிருக்கிறது. அணையின் மொத்த நீர்மட்டமான 119 அடியில் தற்போது 117.95 அடி நிரம்பியிருக்கிறது. அணையின் மொத்த நீர் கொள்ளளவான 7321 மில்லியன் கன அடியில் தற்போது 7086 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. இது அணையின் மொத்த நீர் இருப்பில் 96.79 சதவீதமாகும்.

இந்நிலையில், சாத்தனூர் அணை பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயிக ளிடம் முதற்கட்டமாக ஏற்கனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி கருத்துக் கேட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, 3 மாவட்ட விவசாயிகளை அழைத்து கருத்துக் கேட்க உள்ளனர். விவசாயிகள் தெரிவிக்கும் தேவையின் அடிப்படையில், சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சம்பா பருவ அறுவடை தற்போது நடந்து வருகிறது. ஒரு சிலறது பகுதிகளில் ஜனவரி முதல் வாரத்தில் அறுவடை தொடங்க உள்ளது.

AlsoRead

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

எனவே, தற்போதுள்ள ஏரி மற்றும் கிணற்று நீர் பாசனத்தை நம்பி இந்த போக சாகுபடி முடிந்து விடும். எனவே, பின்சம்பா பருவ சாகுபடிக்கு சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர். அதனால், சாத்தனூர் அணையில் இருந்து பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து அதிகபட்சமாக 90 நாட்கள் வரை பாசனத் துக்கு தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும், செங்கம் தாலுகாவில் உள்ள குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 59.04 அடிக்கு 47.56 அடியும், கலசபாக்கம் தாலுகா மிருகண்டா அணையின் நீர்மட்டம் 22.97 அடிக்கு 17.06 அடியும், போளூர் தாலுகா செண்பகத்தோப்பு அணையின் நீர் மட்டம் 62.32 அடிக்கு 54.12 அடியும் நிரம்பியிருக்கிதறது. எனவே, இந்த 3 அணைகளில் இருந்தும் இந்த ஆண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவில் நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: சாத்தனூர் அணைதிருவண்ணாமலைநீர் பாசனம்
Previous Post

மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு விடுமுறை.

Next Post

வடிகால்வாய் அமைக்கும் இடங்கள்.

Related Posts

Kalasapakkam Election Training

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026
Sivakasi Fireworks Accident

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

23/03/2026

8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு; திண்டுக்கல் அருகே சோக சம்பவம் – பள்ளிக்கு வராதது பின்னணி?

23/03/2026

திண்டுக்கல்: பைக்கில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.84,500 பறிமுதல்

23/03/2026

நிலக்கோட்டை அருகே வாகன சோதனையில் ரூ.4.68 லட்சம் பறிமுதல்

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved